tet books

time


follow me on fb

Wednesday, December 5, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணியிடங்கள் எவ்வாறு வழங்கப்படும்?

ஆசிரியர் தகுதித் தேர்வினை இரண்டாக பிரிக்கிறது TRB

1. ஆசிரியர் தகுதித் தேர்வு ( 12-07-2012 அன்று நடத்தப்பட்டது )
2. துணை ஆசிரியர் தகுதித் தேர்வு ( 14-10-2012 அன்று நடப்பத்தப்பட்டது)


முழுமையான விவரத்திற்கு கீழே உள்ள தினமணி நாளிதழின் செய்தியை காணவும்...



தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வானவர்கள் ( Selected - Yes ) என்பது சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக உள்ளதென்று TRB மூலம் கொடுக்கப்பட்டுள்ள சான்று மட்டுமே.

மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு - Employment Seniority மூலமும் 
பட்டதாரி ஆசிரிர்களுக்கு - வெயிடேஜ் மதிப்பெண் மூலமாகவும்

தகுதியான ஆசிரியர்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உங்களின் தரவரிசை எண்ணை slno எனும் வரிசையின் கீழ் காணலாம். இது சாதி-periority = turn அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட எண் ஆகும்.

இதனை கொண்டே நீங்கள் மாநில அளவில் வேலைவாய்ப்பில் எத்தனையாவது இடம் என்பதனை அறிந்து கொள்ளலாம்.

பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு கவலை இல்லை ஆனால் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் தெளிவாக இவ்வளவுதான் என்பது பள்ளிக் கல்வித் துறையால் முடிவாக அறிவிக்கப்படவில்லை. 

எனவே தற்போது இடைநிலை ஆசிரியராக தேர்வானவர்கள் தங்கள் slno ஐ பார்த்து வைத்துக் கொள்வது சிறப்பு அது 6000 அளவில் இருந்தால் வேலை உறுதி என்பதை தெரிந்து கொள்ளலாம்.  

ஏனென்றால் சென்ற முறை தேர்வானவர்கள் 1400 பேர் உள்ளனர். மொத்தமாக 7500 பணியிடங்களுக்கும் குறைவாகதான் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது.

அதையும் மீறி தேர்வானவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கனவாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எல்லாம் அவன் செயல் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TRB ஐ இத்தனை நாளாக எதிர்பார்த்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் இனி வழி மேல் விழி வைத்து பார்க்க வேண்டியது பள்ளிக் கல்வித் துறையைதான்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.. 


எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்...


0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links