tet books

time


follow me on fb

Saturday, December 28, 2013

TNPSC Group 1 Exam apply Online Now.

Thursday, November 21, 2013

TNTET 2012 - தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் விநியோகம். நவ.23 முதல்...


கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது. அக்., 2012 ஜூலையில், டி.ஆர்.பி.,சார்பில், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடந்தது. தாள் 1, 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது


. தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்க உத்தரவிடவேண்டும் என, சிலர் கோர்ட்டை அணுகினர். இதையடுத்து, டி.இ.டி., தேர்ச்சிக்கான முடிவு, மதிப்பெண்களை இணையதளத்தில் வெளியிடப்பட்டாலும், தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என, கல்வித்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், 2012 ல், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சி.இ.ஓ.,அலுவலங்களில் நவ., 23 முதல் டிச.,15 வரை தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதி, வெற்றி பெற்றவர்கள், ஏற்கனவே, பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, கல்வித்துறை அனுப்பிய அழைப்பு கடிதத்துடன் நேரில் வர வேண்டும். தேர்வர்கள் தவிர, பிறரிடம் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்றும், தபாலிலோ, கொரியர் மூலமோ சான்றுகளை அனுப்ப இயலாது எனவும்,சி.இ.ஓ.,க்கள் தெரிவித்தனர்.

Tuesday, November 12, 2013

இந்த வார வேலை வாய்ப்புகள் - நவம்பர் 2ஆம் வாரம் 2013


ONGC நிறுவனத்தில் டெக்னீசியன் உதவியாளர் 

Dehradun செயல்பட்டு வரும் Oil and Natural Gas Corporation limited (ONGC) நிறுவனத்தில் காலியாக உள்ள A.....

இந்தியன் ஆயில் கழகத்தில் பணி 

குஜராத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மேற்கு மண்டல பைப்லைனில் காலியாக உள்ள உதவியா.....

டிப்ளமோ தகுதிக்கு இந்தியன் ஆயில் கழத்தில் உதவியாளர் பணி 

கான்பூரில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள Engineering Assistant பணியிடங்களை .....

சிறப்பு இளைஞர் காவல் படை தேர்வு: விடை வெளியீடு

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை எழுத்து தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்.....

ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி 

ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர.....

மசகோன் டாக் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணி

மசகோன் டாக் நிறுவனத்தில் காலியாக உள்ள எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமி.....

கெயில் நிறுவனத்தில் பொறியாளர் பணி 

கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்கள.....

சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள.....

ஐடிஐ, டிப்ளமோ தகுதிக்கு சென்ட்ரல் கோல்ஃபீடு நிறுவனத்தில் பணி 

ராஞ்சியில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் கோல்ஃபீல்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Jr.Overman, Mining Sird.....

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூர்கேலா ஸ்டீல் ஆலையில் பணி 

உருக்குத் துறையில் முன்னணி நிறுவனமான செயில் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா), ரூர்கேலாவில் செயல்பட்.....

ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் டிரெய்னி பணி

ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுனத்தில் அப்ரண்டீஸ் டிரெய்னி பணிக்கு.....

எஸ்பிஐயில் Regional Sales Executive பணி 

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் SBI Payment Services நிறுவனத்த.....

ஒட்டுநர், டிகிரி தகுதிக்கு சென்னை ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி 

ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பு நிறுனமான Air India Air Transport Services Limited  நிறுவனத்தில் காலி.....

Junior Scientific Officer பணிக்கான UPSC தேர்வு அறிவிப்பு

Junior Scientific Officer , Training Officer, Assistant Registrar, Supervisor and Faculty பணிக்கு தி.....

Multi tasking Staff பணிக்கான தேர்வு அறிவிப்பு 

ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் Multi tasking Staff(Non technical) தேர்வினை எழுதி வருகின்றனர.....

அகமதாபாத் DRDA-வில் டெக்னீக்கல் உதவியாளர் பணி

அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் District Rural Development Agency (DRDA) -ல் Technical Assistant ,Ass.....

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூர்கேலா ஸ்டீல் ஆலையில் பணி 

உருக்குத் துறையில் முன்னணி நிறுவனமான செயில் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா), ரூர்கேலாவில் செயல்பட்.....

Rural Electrification Corporation நிறுவனத்தில் மேலாளர் பணி

பொதுத்துறை நிறுவனமான Rural Electrification Corporation (REC) நிறுவனத்தில் காலியாக உள்ள AGM, Manager.....

RITES நிறுவனத்தில் DGM, Manager பணி 

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Dy. General Manager (DGM), Manager & Assistan.....

APSRTC -ல் ஓட்டுநர் பணி 

ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை நிறுவனம் (APSRTC) ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும.....


வேலைவாய்ப்பு செய்திகள்... தினமணியில் இருந்து... 

Group 2 - விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம்!



குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை ஆன்லைனிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு ஏற்பாட்டை டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குரூப்-2 தேர்வுக்குட்பட்ட (நேர்காணல் பணிகள்) பதவிகளில் 1064 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வை டிசம்பர் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டி.என்.பி.எஸ்.சி. நடத்த இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சரியான முறையில், விவரங்களை பதிவுசெய்து உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது.
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் பதிவு எண்ணை உள்ளீடு செய்து ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
சரியான முறையில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியிருந்து அதன் விவரம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் இல்லாவிட்டால், பணம் செலுத்தியதற்கான செலான் நகலுடன் பெயர், குரூப்-2 தேர்வுக்கான பதிவு எண், விண்ணப்பம்-தேர்வுக்கட்டணம் செலுத்திய இடம் (போஸ்ட் ஆபீஸ் அல்லது இந்தியன் வங்கி), அதன் முகவரி ஆகிய விவரங்களை contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஹால்டிக்கெட் எப்போது?
இணையதளத்தில் உள்ள விவரங்கள், விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஓர் ஒப்புகை மட்டுமே.
விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு ஷோபனா கூறியுள்ளார்.

நன்றி... தி இந்து 

Tuesday, November 5, 2013

TNTET 2013 - Results for Both Papers - Only on our Blog...


 TET Results Only on Our TNTET Blog... Enjoy...



ஆசிரியர் தகுதி தேர்வு - தேர்ச்சி சதவீதம் 

>Paper I - 12596 person passed which is 4.80% in 262187 canditates

>paper II -14496 person passed 3.62%

Paper 1 Results



Paper 2 Results 

TNTET 2013 Results - இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும்.

http://trb.tn.nic.in/


கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியீடு. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.இணையதளத்தில்
விரைவில் வெளியிடப்படும்.


இன்று மாலை TNTET 2013 தேர்வு முடிவுகளை வெளியிட TRB திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்துள்ளன.

இன்று மாலை அல்லது இரவு வேலைகளில் இந்த தேர்வு முடிவுகளை TRB இணைய தளத்தில் காண முடியும்.

வாழ்த்துக்கள்.. 

Wednesday, October 30, 2013

நவம்பர் 18 க்கு பிறகுதான் TNTET 2013 தேர்வு முடிவுகள்!

தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வானது -  வழக்கின் முடிவை பொறுத்து அமையும் -  ஐகோர்ட்

"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைப்படி, "ஆசிரியர் தகுதி தேர்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி மதிப்பெண்ணில், 5 சதவீதம் தளர்த்தலாம்" என, கூறப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தளர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும், தகுதி மதிப்பெண் தளர்த்தக் கோரி, தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, மே மாதம், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, தகுதி மதிப்பெண்ணை தளர்த்தினால், புதிய தேர்வு தேவையில்லை.
எனவே, புதிய தகுதி தேர்வு தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, கருப்பையா, வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், தலை மை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
இறுதி விசாரணையை, நவ., 18ம் தேதிக்கு தள்ளி வைத்து, "ஆசிரியர் தேர்வு மற்றும் நியமனங்கள், இவ்வழக்கின் மீதான இறுதி முடிவைப் பொறுத்து அமையும்" என,"முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.



இதற்கிடையில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனமும், 

டிசம்பர் மாத இறுதியில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறும் என்பதாலும் நவம்பர் 18 ஆம் தேதிக்கு மேல் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

  

CTET க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31-10-2013 இன்று..

Friday, October 11, 2013

PG TRB 2013 - தேர்வான ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.

SELECTION LIST (PROVISIONAL LIST) பார்க்க..

சான்றிதழ் சரிபார்ப்பு மையம் பற்றிய விவரம் பார்க்க.. 


பாட வாரியாக பார்க்க..

Bio - Chemistry
Micro Biology
phy Edu Director
 Home Science
Political Science
Commerce
Economics
Geography
 History
Zoology
 Botany
Chemistry
Maths
English
Telugu
 Physics   

1:1 என்ற விகிதத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்வான ஆசிரியர்கள் பட்டியலின் படி. தனியாக வீட்டிற்கு எந்த கடிதமும் அனுப்பப்படாது.

தேர்வானவர்கள் தங்கள் சான்றிதழ்களை TRB இணைய தளத்தினில் 15-10-2013 க்குள் ஆன்லைன் மூலமாக upload செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 இந்த மாதம் 22, மற்றும் 23 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பானது குறிப்பிட்ட மையங்களில் நடைபெறும்.

பழைய நாளிதழ் செய்தி...
 
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் யாரும் யாருடைய மதிப்பெண்ணையும் இணையதளத்தில் பார்க்கும் வசதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.


தேர்வு முடிவு வெளியீடு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த ஜூலை 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த போட்டித் தேர்வு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 748 பேர் எழுதினர்.
இந்த நிலையில், தேர்வு முடிவு திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அந்த பாடம் நீங்கலாக மற்ற அனைத்து பாடங்களுக்கான தேர்வு முடிவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.


வழக்கமாக ஒரு தேர்வு முடிவு வெளியிடப்படும்போது தேர்வர்களின் மதிப்பெ ண்ணை அவர்கள் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இந்நிலையில், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் புதிய முறையை அமல்படுத்தியுள்ளது.


அதன்படி, யார் வேண்டுமானாலும் யாருடைய மதிப்பெண்ணையும் அறிந்து கொள்ளும் வகையில் அனைவரின் மதிப்பெண் விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியி டப்பட்டன.


வரலாற்றில் முதல்முறை
ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக இதுவரை பலமுறை போட்டித் தேர்வுகளை நடத்தி இருக்கிறது.
ஆனால், யாரும் யாருடைய மதிப்பெண்ணையும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைவரின் மதிப்பெண் விவரங்களையும் வெளிப்படையாக இணை யதளத்தில் வெளியிடுவது ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் தேர்வு எழுதியவர்கள் அனைவரின் மதிப்பெண் விவரங்களை, இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக அறிந்துகொள்ள முடிவதால், தங்களுக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா? என்பதை ஓரளவுக்கு தாங்களே யூகித்துக்கொள்ள முடியும். 





Monday, October 7, 2013

PG TRB 2013 - Results and Final answer key published

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட PG TRB final answer key and Results publish செய்யப்பட்டுள்ளது.


TRB தேர்வில் தேர்வர்கள் எடுத்த மதிப்பெண்களை மட்டுமே தற்போது வெளியிட்டுள்ளது.

இது வழக்கத்திற்கு மாறாக தேர்வானவர்களின் பட்டியலை எதிர்பார்த்த தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தேர்வு முடிவுகளுக்கான இணைய பகுதி service not available என்று வருகிறது. முதலின் தேர்வு மதிப்பெண்களை காட்டிய இந்த இணைய பக்கம் தற்போது service not available என்று காட்டுவது  இணைய பயன்பாட்டினரிடையே பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது.

இன்னும் சற்று நேரத்தில் இந்த error சரியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உங்கள் தேர்வு முடிவுகளை காண எளிய வழியாக 

 

http://111.118.182.232:82/ResultPrint.aspx?RollNo=25060070


மேற்கண்ட URL ல் கடைசியாக உள்ள RollNo=உங்களின் தேர்வு எண்ணை டைப் செய்து URL bar ல் paste செய்து enter press செய்யவும்.

service unavailable என்று வந்தாலும் 5 நிமிடங்களில் அந்த பக்கம் தானாக உங்கள் மதிப்பெண்ணை காட்டும்!  எனவே அந்த tab ஐ close செய்யாமல் விட்டுவிட்டு மதிப்பெண்ணை பார்க்கவும்!

தேர்வு முடிவு ( உங்கள் மதிப்பெண்ணை காண இங்கே கிளிக் செய்யவும்!)


result link 2


இறுதி விடைகளை காண இங்கே கிளிக் செய்யவும்!


TNTET 2013 தேர்வு முடிவுகளையும் விரைவில் எதிர்பார்க்கலாம்!


இதற்கிடையில்..


அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிகமாக 2645 முதுநிலை ஆசிரியர்கள் 3900 பட்டதாரிஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.20.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Saturday, October 5, 2013

இந்த மாதம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் வாக்காளர் பட்டியல் சேர்த்தல்- நீக்கல்- திருத்தம் நடைபெறும்!

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?

இன்று தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்களுக்கான முகாம்கள் நடக்கின்றன. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அதைச் சேர்த்துக் கொள்ள இது உரிய தருணம்.

1.முதலில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். அதை இணையம் மூலமேகூட நீங்கள் தெரிந்து கொள்ளலாம். http://www.elections.tn.gov.in/searchid.htm என்ற இணைய முகவரிக்குச் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணைக் கொண்டோ, (அடையாள அட்டை இருந்தால்) முகவரியைக் கொண்டோ, வாக்குச் சாவடியைக் கொண்டோ தேடலாம். தமிழிலும் தேடலாம் ( என் அனுபவத்தில் வாக்காளர் அடையாள அட்டையை வைத்துத் தேடுவதைவிட முகவரியைக் கொண்டு தேடுவது எளிதாக இருந்தது) உங்கள் பெயர் இருந்தால் அதை ஒரு பிரிண்ட் அவட் எடுத்து வைத்துக் கொண்டால் பூத் ஸ்லிப் இல்லாமலேயே அதைக் காட்டி வாக்களிக்க எளிதாக இருக்கும்.

பெயர் இல்லாவிட்டால்?
முகாமிற்கு சென்று பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். முகாம்கள் எங்கே நடக்கின்றன என்பதை உங்கள் மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி அலுவலகங்களில் கேட்டால் தெரியும். சென்னையில் எங்கள் பகுதியில் ஆட்டோக்கள் இரண்டு நாள்களாக அலறிக் கொண்டு அலைகின்றன. அல்லது நீங்கள் இணையம் மூலமாகவும் பெயரைப் பதிந்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரி: http://www.elections.tn.gov.in/eregistration/

இப்போது கோட்டை விட்டுவிட்டு அப்புறம் விசைப்பலகை வீரர்களாக இங்கே போர்க்குரல் எழுப்புவது/புலம்பவதில் அர்த்தம் இல்லை
விதைக்க வேண்டிய நாளில் வீட்டில் தூங்கிவிட்டு அறுவடை நாளில் அறுவாளை எடுத்துக் கொண்டு போவதில் பயனில்லை-பழமொழி


Thanks... https://www.facebook.com/maalannarayanan?hc_location=stream 

Tuesday, October 1, 2013

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு.

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை குரூப் பி-யில் பிழையான கேள்வித் தாள் இருந்ததாகவும், அதில் 40 மதிப்பெண்கள் வரை இருந்த பிழையான கேள்வித் தாளால் தங்கள் வாய்ப்பு பறிபோனதாகவும் கூறி, இதற்காக மறு தேர்வு நடத்த வேண்டும், அல்லது முழு மதிப்பெண் இதற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.,

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் நடைபெற்று வந்தது.இதில், மறு தேர்வு நடத்த செவ்வாய்க் கிழமை இன்று நீதிபதி உத்தரவிட்டார்.அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சோமையாஜி,மறு தேர்வு நடத்த கால அவகாசத்துடன் நேரம் அதிகமாகும் என்பதால், 40 மதிப்பெண்களை நீக்கி விட்டு மீதத்துக்கு கணக்கில் கொள்ளலாம் என்றும், அல்லது 40 மதிப்பெண்களை போனஸ் மதிப்பெண்ணாகக் கொடுக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார். ஆனால் இந்த ஆலோசனைகளை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

4 மாதிரி பிரிவு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது, இதில்1 பிரிவில் மட்டுமே பிழையான வினாத்தாள் இருந்துள்ளது. இந்த வினாத்தாள் அனைத்துமே பிழை என்றால் அரசின் பரிந்துரைகளை ஏற்கலாம் ஆனால் ஒருபிரிவு மாணவர்களுக்கு மட்டுமே என்பதால் பாதிப்புகணக்கிடப் படும்.

எனவே, இந்த உத்தரவு கிடைத்த 6 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும்.இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய நுழைவுச் சீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது அதனை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய விண்ணப்பமும் பெறத் தேவையில்லை என்றார் நீதிபதி.

அக்டோபர் முதல்வாரத்தில் TNTET 2012 தேர்வு முடிவுகள்!


தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-I,
கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.

அதேபோல்6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-IIஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில்இரண்டு தேர்வுக்களுக்குமான கீ ஆன்சரை’ கடந்த மாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால்டி.ஆர்.பி. வெளியிட்ட கீ ஆன்சரில்’ ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வருவதாகவும்சில கேள்விகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் ஆதாரத்துடன் புகார்களை தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில் புதிய கீ ஆன்சரையும்தேர்வு முடிவையும் டி.ஆர்.பி. எப்போது வெளியிடும் என்றும்புதிய கீ ஆன்சர் வெளியிடும்போதுதவறான கேள்விகளுக்கு கூடுதல் மார்க் வழங்கப்படுமா என்றும் தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில்ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு குறித்து டி.ஆர்.பி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் அனைத்தும் திருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும்புதிய கீ ஆன்சர் பற்றிய வெளியீடும்,அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது.

ஆனால்தகுதித் தேர்வு முடிவு வெளியிடுவது தாமதமாவதற்கு முக்கியமான காரணம்முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தமிழ்ப் பாடத்தில் 40 கேள்விகள் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதுதான். இந்தவழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் டி.ஆர்.பி. தெரிவித்துவிட்டது. இந்த வழக்கின் முடிவு இந்த மாதம் 30ம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவு வந்தவுடன்அக்டோபர் முதல்வாரத்தில்தயார் நிலையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ என்றார்.

Saturday, September 28, 2013

TNTET 2013 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது?

டி.இ.டி., தேர்வு: தர்மபுரி முதலிடம் ?
கேள்வித்தாள், லீக் சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17,18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. 8 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்து முடிக்கப்பட்டுவிட்டன.தேர்வு முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எனினும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என, தெரியாத நிலை, நீடித்து வருகிறது.இது குறித்து விசாரித்தாலே, ‘தயாராக உள்ளது; விரைவில் வெளியிடுவோம்’ என்ற பதிலை, அதிகாரிகள் திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளின் முடிவுகள், மிக விரைவாக வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் இறுதியில் வெளியிடப்பட்டன.அதேபோல், அக்டோபர், 14ம் தேதி நடந்த இரண்டாவது டி.இ.டி., தேர்வு முடிவுகள், நவம்பர், முதல் வாரத்தில் வெளியிடப்பட்டன. இப்படி, இரு தேர்வுகளின் முடிவுகளை, விரைவாக வெளியிட்ட டி.ஆர்.பி., இந்த முறை, ஒன்றரை மாதம் கடந்த நிலையிலும், அமைதிகாத்து வருவது, தேர்வர் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இந்நிலையில், தேர்வு முடிவில், தர்மபுரி மாவட்ட தேர்வர்கள், முதலிடத்தை பிடித்திருப்பதாகவும், இதன் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், டி.ஆர்.பி., காலம் தாழ்த்தி வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்வு துவங்குவதற்கு முதல் நாள், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், டி.இ.டி., கேள்வித்தாள், ‘லீக்’ ஆனதாக, தகவல்கள் வெளியாயின.இது தொடர்பாக, போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஆறு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, பின்னாளில், கைது எண்ணிக்கை, 15ஐ தாண்டியது.கைதான கும்பல்களிடம் இருந்து, 7.4 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, கேள்வித்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

எனினும், அதில் இடம்பெற்றிருந்த கேள்விகளும், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் ஒன்று அல்ல என்றும், கைதான கும்பல் வைத்திருந்தது, போலியான கேள்வித்தாள் என்றும், போலீசார் தெரிவித்திருந்தனர்.

டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரும்,`டி.இ.டி., தேர்வில், சிறு முறைகேடு கூட நடக்கவில்லை' என, தெரிவித்தார். இப்படியிருக்கும் போது, சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டத்தில், தேர்ச்சி அதிகம் என, தகவல் வெளியாகி இருப்பது, தேர்வர்கள் மத்தியில், புளியை கரைத்துள்ளது.

இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தர்மபுரி மாவட்டம், அனைத்து வகையிலும், மிகவும் பின் தங்கிய மாவட்டம். வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இதனால், படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்புகளை பெரிதும் நம்பி உள்ளனர்.

போட்டித் தேர்வுக்கு, கடுமையாக உழைக்கின்றனர். இதனால், பொதுவாகவே, எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும், தர்மபுரி மாவட்ட இளைஞர்கள், அதிகளவில் தேர்வு பெறுவர். அந்த வகையில், டி.இ.டி., தேர்விலும், அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருக்கலாம். இதில், தேவையில்லாமல், சந்தேகம் அடைய தேவையில்லை.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.


நாளிதழ் செய்தி...

tntet2013 exam results, tntet 2013 exam result 

RRC - அறிமுகம் செய்துள்ள ஆன்லைன் அப்ளிகேசன் - விண்ணப்பிக்க கடைசி நாள் அக் 21


 Notification பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!

http://www.rrcchennai.org.in/admin/download/1370863980_RRC-AD-1.pdf

 விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://www.iroams.com/V1/applicationHome 

SBI திருவாங்கூர் - 10 ஆம் வகுப்பு தகுதிக்கு 1000 க்கும் மேலான பியூன் பணியிடங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 03-10-2013

http://www.statebankoftravancore.com/recruitment.htm 

Monday, September 23, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: ரத்து கோரிய வழக்கு தள்ளுபடி

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆசிரியர் பணி என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பணி அல்ல. கல்வியின் தரமும் குழந்தைகளின் நலனும் முக்கியமானது என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழக அரசு 15.11.2011-ஆம் தேதி அறிவிப்பாணையை வெளியிட்டது.
இதை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்பட 94 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஏற்கெனவே தங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பாணையின்படி, இவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை எனவும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப்பணியிடத்தில் இவர்களை நியமிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து வேதாரண்யத்தை சேர்ந்த சுகுணா உள்பட 130 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், 2010-ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்துக்காக 32 ஆயிரம் பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. எனவே எங்களையும் தகுதித் தேர்வு எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், வேலை வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல். சோமயாஜி, சான்றிதழ் சரி பார்க்கும் நடவடிக்கையில் மனுதாரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே தகுதித் தேர்வு எழுதாமல் பணி கேட்கும் உரிமை மனுதாரர்களுக்கு இல்லை என்று வாதாடினார்.
மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் காசிநாத பாரதி உட்பட பலர் ஆஜராகி வாதாடினர்.
இந்த வழக்கை விசாரித்த பிறகு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் அளித்த உத்தரவு:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கூட இந்த தகுதித் தேர்வை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வழக்கு தொடர்ந்திருக்கும் மனுதாரர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவும் இல்லை; பணியில் சேரவும் இல்லை.
மனுதாரர்களைப் பொருத்தவரை சான்றிதழ் சரிபார்க்கும் தேர்வுக்கு சென்றுள்ளனர். ஆனால் அதில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவிக்கையின் பிரிவு 5-இல் கூறப்பட்டுள்ளபடி விதிவிலக்கு கோர முடியும்.
அவ்வாறு பணியில் சேர்ந்தாலும், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். எனவே தகுதித் தேர்வு எழுதாமல், ஏற்கெனவே சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது என்ற ஒரு காரணத்துக்காக மனுதாரர்களுக்கு பணி வழங்க உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமல் 20 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டியது இருக்கும்.
ஆசிரியர் பணிக்கு 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி தகுதித் தேர்வு நடந்தது. அதில், 6.56 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், அதில் ஒரு சதவீதத்தினர் கூட தேர்ச்சிப் பெறவில்லை. 0.5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றனர்.
இதனால், ஆசிரியர் தகுதி துணை தேர்வு நடத்தவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது. துணைத் தேர்விலும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு எழுதியதில், வெறும் 2.99 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் பணி என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கும் பணி அல்ல. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமும், பதிவு மூப்பு அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கினால், கல்வியின் தரம் குறைந்து விடும். கல்வியின் தரம், குழந்தைகளின் நலன்தான் முக்கியம் எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Saturday, September 21, 2013

தமிழ்நாட்டில் 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியிடு.



சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளைபொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.

Thursday, September 19, 2013

முதுகலை ஆசிரியர் பட்டியல் எப்போது?


முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வின், தற்காலிக விடைகளைவெளியிட்ட சிறிது நாட்களில், அனைத்து பாடங்களுக்கும், தேர்வு பட்டியலையும், டி.ஆர்.பி., தயாரித்தது.இதற்கிடையே, தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகளில் பிழை இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, சென்னை உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க, அவர் கோரியுள்ளார். இந்த பிரச்னையால், இதர பாடங்களுக்கான முடிவைவெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில்,விரைவில், ஒரு முடிவை எடுத்து, கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம்.எனவே, 30ம் தேதிக்குள், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல்வாரத்திலோ வெளியாகும்' என, தெரிவித்தது.

பதிவிறக்க தடங்கலுக்கு வருந்துகிறோம்!

இந்த வலைபூவில் வலது மற்றும் இடது புறம் உள்ள லிங்குகளில் இருந்து TRB, TET, TNPSC ஆகியவற்றிற்கு பயன்படும் மின்னியல் புத்தகங்களை (PDF BooKs ) கடந்த ஒரு மாதமாக யாராலும் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.

இதற்கான காரணம் Adfly எனப்படும் லிங்குகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டதுதான். சில நேரங்களில் இந்த லிங்குகள் (இணைப்புகள்) வேலை செய்தாலும் சில நேரங்களில் இவற்றால் சில பிரட்சனைகள் வருவதாக தெரிகிறது!

இந்த லிங்குகளை நீக்கி கூடிய விரைவில்! ( அடுத்தவாரம்) மின்னியல் புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யக்கூடிய பணியினை செய்கிறோம்! அதுவரை இணைய வாசகர்களுக்கு நன்றிகளும். இதுவரை ஏற்பட்ட தடங்களுக்கு TNTET2012.blog சார்பாக வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!


தொடர்ந்து ஆதரவினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்! நன்றி! 

TNPSC Group 1 - முதன்மை தேர்வுகள் நாள் ஒத்திவைப்பு!


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தேதிகள் மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேதிகளில் வேறு தேர்வு நடைபெற உள்ளதால், அக்டோபர் 25, 26 மற்றும் 27ம் தேதிக்கு முதன்மைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல்,இந்து சமய அறநிலையத்துறையின் 4-ம் நிலைசெயல் அலுவலர் பதவிக்கான தேர்வு அக்டோபர் 26-ல் இருந்து நவம்பர் 16-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Wednesday, September 18, 2013

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து செய்ய கூடாது?ஐகோர்ட் கேள்வி !



முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளித்தார்.அதில் ஏன் தேர்வினை ரத்து செய்ய கூடாது என நீதிபதி கேட்ட கேள்விக்கு 40பிழையான கேள்விகளை தவிர்த்து மற்ற வினாக்களை மதிப்பிடலாம் என்று கூறிய யோசனையினை நீதிபதி மறுத்து தமிழக அரசுடன் ஆலோசித்து வரும் 24 ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்..

Sunday, September 15, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு


சென்னை
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு மிக விரைவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது.


தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்து அதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.10 நாட்களுக்குள் வெளியீடு
இந்த தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும், ஸ்கேன் செய்யப்படும் பணி முடிவடைந்தது.

மேலும், கம்ப்யூட்டர்களில் நிபுணத்துவம் வாய்ந்த குழு வரவழைக்கப்பட்டு இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இந்த மதிப்பீடு 3 மணி நேரத்திற்குள் முடிந்து விடும்.
அதன் பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் யார்? யார்? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரிக்க உள்ளது. இந்த தேர்வு முடிவு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யார், உறுப்பினர் செயலாளர் வசுந்தரா தேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர் மும்முரமாக பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Thursday, September 12, 2013

தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு



முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.
இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.

இதையடுத்து, தமிழ் பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாமா என பரிசீலிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கேள்விகள் அனைத்தும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலேயே உள்ளன என நிபுணர் குழு அறிக்கை அளித்ததால், புரியாத சில கேள்விகள் மட்டும் தேர்விலிருந்து நீக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள் உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தது.
வழக்கு விசாரணையும் செப்.16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் 605 பேர் மட்டும் தமிழ்ப் பாட ஆசிரியர்கள். முதுநிலை தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு மட்டுமே நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எனவே, மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்வு முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்குப் பிறகே தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.

Tuesday, September 10, 2013

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ் பாட முடிவை வெளியிட தடை



முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ் பாடத்திற்கான முடிவை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை
21ஆம் தேதி தமிழ் தேர்வு நடைபெற்றது.இதில் தமிழ் தேர்வில்47கேள்விகள் தவறுதலாக இருந்ததாகவும்,இதனால் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் விஜயலட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,தமிழ் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்,இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வரும்16ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது

Sunday, September 8, 2013

2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும்என்று நிர்ப்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு.

2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–நான் பி.எஸ்சி, பி.எட் முடித்துள்ளேன். கடந்த 2010–ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது. அதன்படிஎனது பெயரும் ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. 13.5.2010 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது.அதன்பின்பு, எனக்கு நியமன ஆணை எதுவும் வரவில்லை. காரணம் கேட்ட போது, 23.8.2010–க்கு பின்னர் பணியில் சேரும் ஆசிரியர்கள்கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் எனக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு
இந்த விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே, எனக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது. எனவே, என்னை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதே போன்று உத்தமபாளையத்தை சேர்ந்த செய்யது இப்ராகிம், மதுரையை சேர்ந்த நிர்மலா ஆகியோரும் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் செய்யது இப்ராகிம் சார்பில் வக்கீல் சண்முகராஜாசேதுபதி, நிர்மலா சார்பில் வக்கீல்முத்தால்ராஜ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

நிர்ப்பந்திக்கக்கூடாது
மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–‘‘ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற விதி கொண்டு வரப்படுவதற்கு முன்பே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து விட்டது. எனவே, மனுதாரர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் மனுதாரர்களை நியமிக்க வேண்டும்.’’இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

Thursday, September 5, 2013

இந்த முறை TNTET தேர்வில் தேர்ச்சி 53 ஆயிரம்!


ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் (8 சதவீதம் பேர்) தேர்ச்சி பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில்77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது 10 சதவீத தேர்ச்சி ஆகும்.
மத்திய அரசின் இலவச கட்டாயகல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சட்டம் கடந்த 23.8.2010 முதல் அமல்படுத்தப்பட்டுஇருக்கிறது. மாநில அளவிலான முதல் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. லட்சக்கணக்கான ஆசிரியர் தேர்வு எழுதியதில் வெறும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
அப்போது தேர்வு நேரம் (1 ½ மணி) போதாது என்ற குற்றச்சாட்டை பெரும்பாலான ஆசிரியர்கள் முன்வைத்ததால் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு துணை ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி விகிதம் ஏறத்தாழ 3 சதவீதமாக உயர்ந்தது. ஆசிரியர் பணி காலி இடங்கள் உள்ள நிலையில், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காததால் கிட்டதட்ட 14 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், 3-வது தகுதித்தேர்வு கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை 2 லட்சத்து 62 ஆயிரம்பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை 4 லட்சம் பேரும் ஆகமொத்தம் 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
அவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது பட்டதாரி ஆசிரியர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.
தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதுதொடர்பான ஆவணங்களை நேரிலோ அல்லதுதபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்துஇருந்தது. ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் ஆவணங்களை அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து ஒவ்வொரு பாடத்திற்கும் 3 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் வினாக்களையும், விடைகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். நிபுணர் குழு அளிக்கும் முடிவின்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த தகுதித்தேர்வில்8 சதவீதம் பேர் அதாவது ஏறத்தாழ 53 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது.
முந்தைய தகுதித்தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த தகுதித்தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இரண்டிலும் சரி தமிழ் பாடத்தில் மட்டும் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக கருத்து எழுந்தது. கேள்விகள், விடைகள் தவறாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நிபுணர் குழுவின் முடிவின்படி உரிய மதிப்பெண் வழங்கப்படும்.
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால்தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை அகில இந்திய அளவில் 7½ லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதி இருந்தனர். தேர்வு முடிவு 2-ந்தேதி வெளியானது. மொத்தம் 77 ஆயிரத்து 634 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது 10 சதவீத தேர்ச்சி, முந்தைய தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து இருப்பதால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
நன்றி : மாலை மலர்

Wednesday, September 4, 2013

TNPSC Group 2 - Apply Online - for Degree candidates.


TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பு - 1064 பணியிடங்கள்

வணிக வரித்துறை ஆணையர், சார்பதிவாளர் உள்ளிட்ட 19 பதவிகளுக்கான 1064 பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

காலியிடங்கள் : 1064

கட்டணம் : ரூ.125

விண்ணப்பம் வெளியாகும் தேதி: 05.09.2013

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2013

கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.10.2013 (பேங்க்/போஸ்ட் ஆபீஸ் மூலம்)

தேர்வு நடைபெறும் நாள்: 01.12.2013, 10.00 AM to 1.00 AM 





NOTIFICATIONS - 2013
1
14/2013 05.09.2013
05.09.2013
04.10.2013
01.12.2013
Apply Online

Wednesday, August 21, 2013

TNPSC GROUP 4 - Hallticket கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்!

 23,24 நாளை மற்றும் நாளை மறுநாள் விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்திய சலானுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இதற்கான தனி பிரிவினை அணுகி தங்கள் தேர்வு மைய நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

 மேலும் விவரங்கள்....


குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா செவ்வாய்க்கிழமை
வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 தேர்வு வரும் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்வாணைய இணையதளத்தில்
(www.tnpsc.gov.in)) வெளியிடப்படப்பட்டது. 

ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தாங்கள் விண்ணப்பித்து கட்டணம்
செலுத்தியதற்கான படிவத்தை டி.என்.பி.எஸ்.சி., மின்னஞ்சல் மூலமாக அனுப்ப
கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். 

மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை தேர்வாணைய
இணையதளத்தில் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மின்னஞ்சல் அனுப்பியும் ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின்
விண்ணப்பம் மற்றும் உரிய தேதியில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்
சீட்டு ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வரும் 23 மற்றும்
24 ஆகிய தேதிகளில் அணுக வேண்டும். தேர்வு எழுத தேர்வு செய்துள்ள மையம்
அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் தேர்வாணைய
அலுவலரை இரண்டு தினங்களிலும் தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட் குறித்த
தகவல்களை கேட்டுப் பெறலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்ட அலுவலர்
தெரிவித்துள்ளார்.

other links