tet books

time


follow me on fb

Wednesday, February 27, 2013

TNTET 2013 EXAM DATE - பரவும் புரளி குருஞ்செய்திகள்...

சமூகத்தில் புரளிகளுக்கு என்று ஒரு இடம் எப்போதும் உள்ளது என்பது உண்மைதான்.

அதற்காக எதற்கெல்லாம் புரளியை கிளப்புவது என்பது  கிடையாது போல...

அதற்குள்ளாக TNTET தேர்வுநாள்... ஆன்லைன் அப்லை செய்ய நாள் என்று ஒரு பட்டியலுடன் பரவிக் கொண்டிருக்கிறது அந்த குறுஞ்செய்தி.. அதில்..



ஆசிரியர் தகுதித் தேர்வு 2013
ONLINE APPLY DATE :- 13.03.2013   - 23.4.2013
EXAM DATE :- 9.6.2013
VACANT POSITION  
D.TEd - 2639 
TAMIL - 891
 ENGLISH -2654
MATHS -4096
SCIENCE - 6518
SOCIAL SCIENCE - 1530 

என்று தட்டி விட்டிருக்கிறார்கள் யாரோ..


இது புரளி என்பதற்கான காரணங்கள்...
ஆன்லைனில் பதிவு செய்வதால்  இடையில்  இரண்டு மாத இடைவெளி என்பது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடும்.

குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு நாள் சென்ற ஆண்டு TET தேர்விற்காக ஒதுக்கப்பட்ட தேர்வு நாளுடன் ஒத்து வருகிறது..

சமூக அறிவியல் பாடத்திற்குதான் இருப்பதிலேயே அதிக ஆசிரியர்கள் தேவை உள்ளதாக இதற்கு முன்னர் அதிகார பூர்வமான செய்திகள் வெளி வந்துள்ளது..

எனவே இந்த குறுஞ்செய்தியை நம்பவேண்டாம் எனவும்..

அதிகாரபூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் வரை காத்திருக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

முடிந்தவரை மே மாதம் இறுதிக்குள்ளாக தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகளே வெளியாகும் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்து...

Wednesday, February 20, 2013

ஏப்ரல் இறுதியிலேயே வருமா - TNTET 2013 தேர்வு?

அடுத்த மாத தொடக்கதில் இதற்கான பதிலை நாம் TRB இடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் :

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி.,"பகீர்' தகவல்
முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.
தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு,அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான,
தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.
உண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களைஅறிய, அனைத்து பல்கலைகளுக்கும், டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன. அதில், "எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை' என, தெரிவித்துள்ளன.
இந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது. 



நன்றி..S.Murugavel M.sc.,B.Ed 

Friday, February 15, 2013

TNPSC Group 2 Results Published...

click this below link to view selected candidates list

http://www.tnpsc.gov.in/results/csse2k12_seldoc_new.pdf

ரசியாவை தாக்கிய விண்கலின் எரிக்குழம்பு... 400 பேர் படுகாயம்..

செய்தி மற்றும் வீடியோவிற்கு கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்யவும்


http://www.bbc.co.uk/news/world-europe-21470205


http://www.youtube.com/watch?v=RX0oRfj3Hd4


http://www.space.com/19801-possible-meteor-blast-russia.html  

SBI - PO 1500 காலிபணியிடங்கள்... விண்ணப்பிங்க... கடைசி நாள் பிப்ரவரி 23 - 2013


TNPSC GROUP 1 - Hallticket download

Thursday, February 14, 2013

ராணுவ கல்லூரியில் படிக்க 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு...

வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் உள்ள டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர்ந்து படிக்க 7–ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோரின் படிப்புக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய ராணுவ கல்லூரி இயங்கி வருகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனம், ராணுவ பணிகளில் சேர மாணவர்களை தயார்படுத்துகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இங்கு சேர விண்ணப்பங்களை வரவேற்கிறது.தற்போது 7–ம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள், 2014 ஜனவரியில் 7–ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த ராணுவ கல்லூரியில் சேரலாம். குறைந்தபட்ச வயது 11½ (1.1.2014–ன் படி). 13 வயது பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது. விண்ணப்ப கட்டணம் ரூ.400 (பதிவு தபாலில் பெற), ரூ.450 (விரைவு அஞ்சலுக்கு). எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் என்றால் பதிவு தபாலில் பெற வேண்டுமானால் ரூ.355–ம் விரைவு தபால் மூலமாக எனில் ரூ.405–ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட விண்ணப்ப கட்டணத்தை தி கமாண்டன்ட், ஆர்.ஐ.எம்.சி. டேராடன் என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியின் டிமாண்ட் டிராப்டாக மேற்கண்ட கல்வி நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் மார்ச் 31–ந் தேதி ஆகும்.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு சென்னை உள்பட மாநிலங்களின் தலைநகரங்களில் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Saturday, February 2, 2013

உயர்கிறது ஆசிரியர்கள் தேவை எண்ணிக்கை.... ஜீன் மாதத்திற்குள் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு

ஆசிரியர்கள் நியமனத்திற்கு அடுத்த பட்டியலில் 15,000 பேர்
இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக,15 ஆயிரம் ஆசிரியர்களை,
புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது.
கட்டாய கல்விச் சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரிஆசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை,12ல் நடந்த முதல், டி.இ.டி., தேர்வை, எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய போதும், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மொத்த தேர்வர்களில், 0.33 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதால், தோல்வி அடைந்தவர்களுக்குமீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, அக்., 14ல், இரண்டாவது, டி.இ.டி., தேர்வு நடந்தது.முதல் தேர்வு கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும், தேர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.இதனால், இரண்டாவது தேர்வுக்கு, கேள்வித்தாள் கடினத்தை சற்று தளர்த்தியதுடன், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணியிலிருந்து, மூன்று மணி நேரமாக உயர்த்தப்பட்டது.இதன் காரணமாக, இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேர் (3 சதவீதம்), தேர்ச்சி பெற்றனர். இரு தேர்வுகளிலும் தேர்வு பெற்றவர்களுக்கு, கடந்த டிசம்பரில், பணி நியமனம் வழங்கப்பட்டது.இந்நிலையில், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், டி.ஆர்.பி., இறங்கியுள்ளது.
ஏற்கனவே நடந்த டி.இ.டி., தேர்வுகளில்,இன்னும், 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.இந்த ஆண்டு, மே இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், 15 முதல், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை, புதிதாக தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.முதலில், ஜூன் மாதத்திற்குப் பின், மூன்றாவது, டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஜூன்மாதத்திற்குப் பின் துவக்கினால், இறுதிக்கட்ட தேர்வு முடிய, இரண்டு, மூன்று மாதங்கள் கரைந்து விடும் என, கல்வித் துறை கருதுகிறது.
புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், பணியில் சேர்வதற்கு ஏற்ப, தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,யிடம், கல்வித் துறை உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.எனவே, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள், ஏப்., 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் இறுதியில் தேர்வை நடத்தி, மே மாதத்திற்குள், அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.



ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி 


சென்னை: ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு, கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது.தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, 15 பேர், ஐகோர்ட்டில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, சலுகை காட்டுமாறு, கல்வித் துறைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என, கோரப்பட்டது.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி, சந்துரு பிறப்பித்த உத்தரவு:முதலாவதாகநடந்த தகுதி தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால், இரண்டாவதாக, தகுதி தேர்வை, அரசு நடத்தியது.
இரண்டாவது தேர்விலும், மனுதாரர்கள் தேர்ச்சி பெறவில்லை. மற்ற மாநிலங்களில், தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், இங்கும் வழங்க வேண்டும் என, கோருகின்றனர்.
மற்ற மாநிலங்களில் சலுகைகள் வழங்குவது, தமிழகத்தை கட்டுப்படுத்தாது. குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களின் கல்வி தரத்தில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை, பரிசீலிக்க விரும்பவில்லை. கல்வி தரத்தை குறைக்கும் வகையில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி, சந்துரு உத்தரவிட்டுள்ளார். 

other links