tet books

time


follow me on fb

Saturday, March 30, 2013

இந்த வருடத்தின் கடைசி காஸ் புக்கிங் ... இன்று...

Last Day to book your SUBSIDISED LPG Cylinder - இன்றே கடைசி நாள் - Content Suitable for ALL - Info Alert category

Please SHARE SHARE SHARE Responsibly 

மத்திய அரசு மக்களுக்கு தேவையான எரிபொருள் எல்பிஜி சிலின்டரை மானிய விலையில் கொடுப்பதாக கூறிக்கொண்டு அதனையும் கன்ட்ரோல் செய்து ரேஷன் முறையில் 6 சிலின்டர்கள் தான் ஒவ்வொரு வருடத்திர்க்கும் என கூறியது. இது பின்பு எலக்ஷனை முன்னிட்டு 9 சிலின்டர்களாக உயர்த்தபட்டது. நிரைய பேருக்கு இந்த 9 சிலின்டர் விஹ்ச்யம் தெரியாமல் போனாலும் இது தான் உண்மை,

நீங்கள் 9 சிலின்டரையும் மார்ச் 31ஆம் தேதிக்குள் வாங்க வேண்டும்.

வாங்காத சிலின்டர்கள் ரோலான் முறையில் அடுத்த வருடத்திற்க்கு அக்கவுன்ட் செய்ய முடியாது.

நிறைய கேஸ் ஏஜன்ஸிகள் டிசம்பர் 31 என்று பொய் கூறும் அதனால் இன்று தான் கடைசி நாள் உங்கள் மானிய விலையில் கேஸ் சிலின்டர் புக் செய்ய.

இன்று வரை நீங்கள் 9க்கும் குறைவான் சிலின்டரை கடந்த ஒரு ஆன்டு காலத்தில் வாங்கியிருந்தால் இன்று புக் செய்தால் இந்த வருட கோட்டாவுக்குள் வரும்.

டெலிவிரி ஏப்ரல் மாதமானாலும் இந்த வருட கோட்டாவில் தான் இது இடம் பிடிக்கும்

அதிகபட்ச விலை 402 ரூபாய்கள் மட்டுமே செலுத்த வேண்டும் தமிழ் நாட்டில்.

இதை விட்டால் 975 ரூபாய் வரை செலவு செய்ய நேரலாம் ஒரு காஸ் சிலின்டருக்கு மானியம் இல்லாமல்,


நன்றி https://www.facebook.com/nagravi1

Thursday, March 28, 2013

டாக்டர்,செவிலியர்,ஆசிரியர்பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை - நிரப்பப்பட்ட பணியிடங்களை கணக்கு காட்டிய அமைச்சர்- இந்த ஆண்டு எத்தனை பணியிடங்கள் நிரப்பப்படும்?

 அமைச்சர் கே.பி.முனுசாமி சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் சவுந்திர ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.),ஆறுமுகம் (இந்திய கம்யூ.), என்.ஆர்.ரங்கநாதன் (காங்) ஆகியோர் கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர். அவர்கள் கூறும் போது, தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரித்து வரும் காலிபணியிடங்களை பூர்த்தி செய்து நிர்வாகபணிகளை தொய்வின்றி நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்கள். இதற்கு பதில் அளித்து நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:- அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களைநிரப்பும் அமைப்புக்களான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம், வேலை வாய்ப்பகங்கள், தேர்வு குழுக்கள் ஆகியவை மூலம் போட்டி தேர்வு, நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் ஒவ்வொரு பதவிக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன முறைகள் மூலம், பதவிகள் நிரப்பப் பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பகம் மூலம் அரசு துறைகளில் 54,420 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,581 பணியிடங்களும் மற்ற கல்லூரிகளில் 64,435 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 16,793 சத்துணவு அமைப் பாளர்கள், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்களும் 11,803 அங்கன் வாடி பணியாளர் பணியிடங்களும் நிரப்பப் பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகங்களில் 16,963 பணியிடங் களும் கூட்டுறவு நியாய விலை கடைகளில் 6,307 பணியிடங்களும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,489பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மற்றும் பல்வேறு அரசு துறை நிறுவனங்களில் 3717 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 22,269 ஆசிரியர் பணியிடங்களும், 1091 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,042 பணியிடங்களும், கூட்டுறவு வங்கிகளில்3607 பணியிடங்களும், தமிழ் நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் 10,105 காலி பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ பணி கழகத்தால் 2,159 மருத்துவர்கள், 4 ஆயிரம் செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. எனவே காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடர்ந்து நடைபெறுவதால் நிர்வாக பணிகள் தொய்வின்றி நடக்கிறது. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் அதிகப்படியானகாலி பணியிடங்களை இந்த அரசு நிரப்பி உள்ளது. இதனால் அரசு நிர்வாகமும் சரியாக நடைபெறுகிறது. இவ்வாறு அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.


இந்த ஆண்டு ஒவ்வொரு துறைக்குமான பணியிடங்கள் எத்தனை என்பதை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் துறை வாரியான மானிய விவாதங்களில் அறியலாம்.
பள்ளிக் கல்வித் துறைக்கான விவாதம் ஏப்ரல் 10 என தெரிகிறது. 

Sunday, March 24, 2013

New TNTET Study materials - 2013

History 1

History 2

Science 1

Science 2

Science 3

Tamil 1

Tamil 2     


எளிமையான முறையில் பதிவிறக்கம் செய்யக்கூடிய அமைப்பு முறையை வழங்க இந்த தளம் Google Drive ஐ உடயோகிக்கிறது... இத்தளத்தில் உள்ள கற்றல் கட்டுகளை (Study Materials) பதிவிறக்கம் (Download ) செய்ய உங்களுக்கு தேவை ஒரு Google Account.

மேலும் இந்த ஒட்டுகளை (links) நீங்கள் கிளிக் செய்ததும் 5 நொடிகள் காத்திருந்து பின்னர் வலது மேல் ஓரமாக இருக்கும் skip ad என்பதை கிளிக் செய்தால் போதும்

பின் அது உங்களை அழைத்து செல்லும் பக்கத்தில் இருந்து நீங்கள் Down Arrow (பதிவிறக்க பொத்தானை) அழுத்துவதன் மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடவே நீங்கள் முழுமையான pdf பக்கங்களையும் ஒருமுறை பார்வையிட்டு பின் பதிவிறக்கம் செய்யும் வசதியும் உண்டு.

மொத்தமாகவும் 2 GB அளவிற்கு பதிவிறக்கம் செய்யலாம் அதுவும் இலவசமாகவும் எளிமையாகவும்... புதுமை - எளிமை - தனித்துவம் உணருங்கள்..

மேலும் கீழே உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.. இந்த வலைபக்கத்தின் சீரமைப்பிற்கு அது மிக அவசியம்.. 

Saturday, March 23, 2013

ANNA UNIVERSITY - EXAM RESULTS



Registration Number:    

Thursday, March 21, 2013

TNTET 2013 - புதிய ஆசிரியர் நியமனம் பற்றி அறிவிப்பில்லாத ஒரு பட்ஜெட்

புதிய ஆசிரியர்களின் நியமனம் பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் இன்று இல்லை.

இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி பற்றிய அறிவிப்பிற்கான நாள் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் தெரியவரும்.

இன்று மார்ச் 21 ஆம் தேதி தமிழக பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அது இல்லாமல் போனது.

எனினும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பினை விரைவில் ( இந்த மாத இறுதிக்குள்) எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே கூற பட்டது போல ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் வரப்போகும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான காலம் குறைவாகவே இருக்கும்.

மே மாதம் இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது

ஆசிரியர் காலியிடங்கள் சேகரிக்கும் பணி தொடக்கம்.

தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 20.03.2013 அன்றைய நிலவரப்படி காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது : 20.03.2013 அன்றுள்ளபடி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை உரிய படிவத்தில் 26.03.2013 அன்று தொடக்கக் கல்வி
இயக்ககத்தில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது அளிக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நன்றி ஆசிரியர் குரல் 

Saturday, March 16, 2013

இந்த வார வேலை வாய்ப்புகள்

National University of Education Planing and Administration - விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 29 - மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக செய்யவும்

மத்திய தொழில் பாதுகாப்பு படை - 1600 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முறையை காண இங்கே கிளிக் செய்யவும் ....விண்ணப்பிக்க கடைசி நாள் 09-04-2013
 
டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் கழகத்தில் பணி - காலி பணியிடங்கள் 61 - விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2013 - விண்ணப்பத்தை பதிவிற்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

இந்திய ஆட்சிப்பணிக்கான IAS சிவில் சர்விஸ் தேர்வுகள் - விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 4 - விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்...

பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சி.யில் 750 உதவி நிர்வாக அலுவலர் பணி - ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.04.13

2240 மத்திய காவல் துறையில் காவலர் பணியிடங்கள்...- விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10


அரசு கலைக் கல்லூரிகள் காலவரையின்றி மூடல் - மாணவர்களின் போராட்ட தீவிரத்தால் அரசு நடவடிக்கை

கடந்த 15 நாட்களாக மாநிலம் முழுமையும் கல்லூரி மாணவர்களின் இலங்கை ஆதரவு போராட்ட தீவிரத்தினை அடுத்து திங்கட்கிழமை முதல் அரசு கலைக்கல்லூரிகளை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Wednesday, March 13, 2013

TNTET & TNPSC STUDY MATERIALS IN SUBJECT WISE

கல்வி உளவியல் பாடக்குறிப்புகள்

அக்டோபர் 2012 - விடைக் குறிப்புகள்

தமிழ் பாடக்குறிப்புகள்

ஆங்கில பாடக்குறிப்புகள்

கணிதம் - பாடக்குறிப்புகள்

அறிவியல் - பாடக்குறிப்புகள்

சமூக அறிவியல் பாடக்குறிப்புகள்

ஒரு முழு புத்தகம்

TNPSC முழு புத்தகம்

மற்ற - கற்றல் குறிப்புகள்

வங்கி மற்றும் மற்ற பிற தேர்வுகளுக்கான மின்னியல் புத்தகங்கள் 


TNPSC AND TNTET STUDY MATERIALS IN MP3 FORMATE - GOOGLE ACCOUNT NEEDED..

Tuesday, March 12, 2013

Group1, 2,4 மற்றும் VAO தேர்வு முறைகளில் மாற்றம்

 திருத்தியமைக்கப்பட்ட பாடதிட்டம் காண இங்கே கிளிக் செய்யவும்....


குரூப் 2, 4 தேர்விலும் மாற்றம் விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் நீக்கம்
 நெல்லை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.குரூப் 4, 2 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 72பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு வெளியிட்டது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாநில அளவில் முதன்மை பணிகளான துணை கலெக்டர், டிஎஸ்பி முதல் இளநிலை உதவியாளர், தட்டச்சர் வரையிலான அனைத்து பணிகளுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றத்தை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அனைத்து தேர்வுகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை டிஎன்ப¤எஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான72 பக்க புதிய பாடத்திட்டம்

சில பள்ளி கல்வி சார் செய்திகள்


 26 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள்: ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தில் 26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவுள்ள மாதிரிப் பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை தோற்றுவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகள், மாநிலத்தின் இதர பகுதிகளில் வசிப்போருக்கு இணையான சீரான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், பின்தங்கியஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இப்போது அரியலூர், மங்களூர் (கடலூர் மாவட்டம்), காரிமங்கலம், பாலக்கோடு (தருமபுரி மாவட்டம்), சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் (ஈரோடு மாவட்டம்), குண்டடம் (திருப்பூர் மாவட்டம்), தளி, வேப்பனஹள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்), வேப்பூர் (பெரம்பலூர் மாவட்டம்), நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி, பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலம், கொளத்தூர், மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, ஏற்காடு (சேலம் மாவட்டம்), ஜவ்வாதுமலை (திருவண்ணாமலை மாவட்டம்), திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்), மல்லசமுத்திரம் (நாமக்கல் மாவட்டம்) ஆகிய 26 ஒன்றியங்களில், ஒன்றியத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி வீதம் 26 மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் கொண்ட பள்ளிகளாக வரும் கல்வியாண்டு முதல் இந்தப் பள்ளிகள் செயல்படும். இந்தப் பள்ளிகளுக்கான சொந்தக் கட்டடம் கட்டும் வரை, இந்தப் பள்ளிகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இயங்கும்.
பணியிடங்கள் தோற்றுவிப்பு: 26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவிருக்கும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக, ஒவ்வொருபள்ளிக்கும் தலைமையாசிரியர் பணியிடம்,ஏழு முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,கம்ப்யூட்டர், உடற்கல்வி, இசை, ஓவியம் ஆகிய ஆசிரியர் பணியிடங்கள் தலா ஒன்று என 17 ஆசிரியர் பணியிடங்களும், இளநிலைஉதவியாளர், நூலகர் பணியிடம், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், இரவு காவலாளி, தோட்டக்காரர் என ஏழு ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 9, 2013

TNTET மற்றும் TNPSC கான இலவச பயிற்சி வகுப்புகள்..

போட்டித் தேர்வுகளில் மாணவர்களின் திறனை முழுமையடைய செய்ய இலவச பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது தமிழக வேலைவைாய்ப்பு மற்றும் பயிற்சி துறை..


இந்த ஆண்டு தேவைப்படும் ஆசிரியர்கள் எண்ணிக்கை - 15 ஆயிரம்
மற்றும் மற்ற பிற மாநில பணிகளுக்கு தேவை எண்ணிக்கை - 30 ஆயிரம்

டி.என்.பி.எஸ்.சி 2013 - 2014 ஆண்டு முழுமைக்குமான போட்டி தேர்வுகளின் முழு விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு
9382211111, 9282233333 

Wednesday, March 6, 2013

ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வழக்கு மதுரை: கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. தூத்துக்குடி டாக்டர் விஜயரங்கன் தாக்கல் செய்த பொது நல மனு: பள்ளிகளில்13 முதல் 14 சதவீதம் மாணவர்கள் கற்றல்குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க மனநல அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிந்துள்ளது. கற்றலில் குறைபாடு உள்ள (டிஸ்லெக்சியா) மாணவர்களால் சரளமாக, சத்தமாக பேச முடியாது. புதிய வார்த்தைகளை கற்க முடியாது. தகுந்த இடத்தில், பொருத்தமானவார்த்தைகளை பயன்படுத்த தெரியாது. உயர்கல்விக்குச் செல்லும் போதும், அதேநிலை நீடிக்கிறது. இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இது நரம்பு தொடர்பான குறைபாடு என்கின்றனர். இம்மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல்நேரம் ஒதுக்க வேண்டும். அமைதியான சூழல்வேண்டும். பிறமொழிகளில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒலி-ஒளி காட்சி மூலம்கற்பிக்க வேண்டும். சென்னையில் இந்தி பாடத்தில் சரியாக கவனம் செலுத்தாத 14 வயது மாணவன், கத்தியால் குத்தியதில், ஆசிரியை இறந்தார். கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால், இத்தகைய சம்பவங்களை தவிர்க்க முடியும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கக்கோரி பள்ளிக் கல்வித்துறை செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளருக்கு மனு அளித்தும் நடவடிக்கைஇல்லை. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது. விசாரணையை மார்ச் 20 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Sunday, March 3, 2013

மே மாதம் இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு

உறுதி செய்யப்பட்ட செய்தி ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது...

ஆன்லைன் பதிவு மற்றும் மற்ற விவரங்களை விரைவில் இந்த மாத நடுவிலே எதிர் பார்க்கலாம்..

வாழ்த்துக்கள்... வாசகர்களுக்கு...

இந்த வாரம் என்ன வேலை வாய்ப்பு என்று அறிந்து கொள்ள நம் இணையத்தின் துணை இணைப்பான http://tnpower.blogspot.in/ ஐ கிளிக் செய்து பார்க்கவும்...


முழுமையான இணைய உலாவலுக்கு கணினி வழியான இணைப்பினை பயன்படுத்தவும்..

நன்றி.. 

Friday, March 1, 2013

முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 5 ல் கவுன்சிலிங்

முதுகலை ஆசிரியர்களுக்குமார்ச் 5 ல் கவுன்சிலிங்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம் மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 2308 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் பெற்றனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில், கடந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் சேராமல் இருந்தவர்களையும், கூடுதல் காலி பணியிடங்களையும் கணக்கிட்டு, இரண்டாவது தேர்வு பட்டியல், கடந்த ஜனவரி 18ல் வெளியிடப்பட்டது.
இதில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு, பிப்.,20 ல் கவுன்சிலிங் நடந்தது. பள்ளிக் கல்வித் துறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில், மார்ச் 5 ல் கலந்தாய்வு நடக்கிறது. அன்று காலையில், அந்தந்த மாவட்டத்திற்குள்ளும், மதியம் பிற மாவட்டங்களுக்குள்ளும் கலந்தாய்வு நடக்கிறது.தேர்வு செய்யப்பட்ட, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உரிய சான்றுகளுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

 http://trb.tn.nic.in/PG2012/18012013/msg.htm

other links