tet books

time


follow me on fb

Wednesday, February 26, 2014

12 ஆம் வகுப்பு தகுதிக்கு இந்திய தபால் துறையில் 8112 காலிபணியிடங்கள்.

Saturday, February 15, 2014

சூன் மாதம்தான் TNTET தேர்வான புதிய ஆசிரியர் பணி நியமனம்...


TET - ஆசிரியர் பணி நியமனம்தாமதமாகும், புதிய நியமனம்
ஜூன் மாதம் நடைபெறும்
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்
குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால்
தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும்
தாமதமாகும். பிளஸ்2 பொதுத்
தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ்
சரிப்பார்ப்பு நடக்கும். அதன் பின்னர்
வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன்
மாதம் பணி நியமனம்
செய்யப்படுவார்கள்.இதனால்
அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த
ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர்.
இந்த முறை நடைபெற்ற தேர்விலும் பல
குளறுபடிகள் ஏற்பட்டது. குறிப்பாக
வினாத்தாளில் பல தவறுகள் இருந்தன.
இதனால் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
எனவே தேர்வு முடிவுகள் வெளியிடுவதில்
தாமதம் ஏற்பட்டது. இந்த
பிரச்சனைகளை கடந்து ரிசல்ட் வெளியானது.
வழக்கமாக ரிசல்ட் வெளியான சில
மாதங்களில் பணி நியமனம்
வழங்கப்படும். ஆனால் இந்த முறை ரிசல்ட்
வெளியான பின்னர் பலர்
வழக்கு தொடர்ந்தனர். இதனால் சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் பாதித்தது.
இதற்கிடையில் தகுதித்
தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை
இடஒதுக்கீட்டு அடிப்படையில் குறைக்க
வேண்டும் என்று பல அமைப்புகள்
அரசை வலியுறுத்தியது.இது தொடர்பாக
தேர்வு வாரியம்,
பள்ளிக்கல்வித்துறை செயலாளர்
சபீதாவுக்கு பரிந்துரைத்தது. ஆனால்,
அதை அவர் ஏற்கவில்லை. தகுதியை மட்டும்
பார்க்க வேண்டும். இதில்
இடஒதுக்கீடு முறை கூடாது. மதிப்பெண்
குறைப்பு இல்லை என்பதில் கண்டிப்புடன்
இருந்தார். இதனால் 90 மதிப்பெண் பெற்ற 25
ஆயிரம் பேருக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
அவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட
இருந்தது.
இந்த நிலையில் கடைசி கட்டத்தில்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த
பிரச்சனையில் தலையிட்டது.
இடஒதுக்கீட்டு அடிப்படையில் மதிப்பெண்
குறைக்கப்பட வேண்டும். இல்லையென்றால்
வன்கொடுமை சட்டம் பாயும்
என்று எச்சரித்தது.
இது அரசுக்கு நெருக்கடியை தந்தது.
இதனால் 5சதவீத மதிப்பெண்
குறைப்பை முதல்வர் அறிவித்தார். இதனால்
இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.
அதாவது 90 மதிப்பெண் பெற்று 25ஆயிரம்
பேரும், இப்போது 82 மதிப்பெண்ணாக
குறைத்துள்ளதால் கூடுதலாக 45 ஆயிரம்
பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதிதாக
தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க
வேண்டும்.
இப்பணியில்
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள்
ஈடுபடுவார்கள்.
இப்போது அவர்களை பயன்படுத்த முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது: மார்ச் 3ம் தேதி பொதுத்
தேர்வு தொடங்குகிறது. இந்த
பணிக்கு முன்பாக பல ஆய்வு கூட்டம்
நடக்கும். இதற்கு துறையின்
இணை இயக்குனர்கள் இருக்க வேண்டும்.
எனவே தேர்வு முடியும் வரையில் சான்றிதழ்
சரிபார்க்க முடியாது. பிளஸ்2
தேர்வு முடிந்ததும் மார்ச் மாத இறுதியில்
சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும்.
எப்படியும் 10 நாட்களுக்கு மேல்
இப்பணி நடக்கும். ஏப்ரல் மாதம் வெயிட்டேஜ்
மதிப்பெண் பார்க்கப்படும். அதன் பின்னர்
லோக்சபா பொதுத் தேர்தல் இருப்பதால்,
அடுத்த கல்வியாண்டில், அதாவது ஜுன்
மாதம் தான் பணி நியமனம்
செய்யப்படுவார்கள். இவாறு அவர் கூறினார்.

Thursday, February 13, 2014

TET 2013 தேர்வு அனைவருக்கும் பணி வழங்கும் தேர்வு அல்ல.. தகுதித் தேர்வு மட்டுமே!

டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?

அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 15 ஆயிரம் பட்டதாரி,
இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களே உள்ளதால் மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும் தகுதியை மட்டுமே பெற்றுள்ளனர். இப்போது பணி நியமனம் செய்யப்படுபவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனங்களில் முன்னுரிமை கிடைக்கும். மேலும் அடுத்த ஆண்டுக்கான பணி நியமனத்திலும் இவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் எனஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இப்போது தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் பேருக்கு முதலில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்குதனியாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு நியமிக்கப்படும் 15 ஆயிரம் ஆசிரியர்களைத் தவிர மீதமுள்ளவர்களின் நிலை என்ன என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர்.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராவதற்கான அடிப்படைத் தகுதி மட்டுமே. அந்த வகையில் இந்த 75 ஆயிரம்பேரும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.முதலில் இவர்களுக்கு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். பிறகு, பட்டதாரிஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்.அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணி நியமனம் கோரி ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆண்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இடைநிலை ஆசிரியர்கள்: 

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டயப் படிப்பு அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.தகுதியான விண்ணப்பதாரர்களில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள் தேர்வு செய்யப்படாதவர்களாகக் கருதப்படுவர்.இவர்கள் அனைவரும் அடுத்து நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தங்களது மதிப்பெண்ணை அதிகரிப்பதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம்.அதேநேரத்தில், ஒரு தேர்வில் பெற்ற தேர்ச்சி ஏழரை ஆண்டுகளுக்குச் செல்லும் என்பதால், அடுத்து வரும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெறுவதற்கான தகுதியையும் இவர்கள் பெறுவார்கள்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் என்பது அப்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் அடிப்படையில் இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பணி நியமனத்துக்காக விண்ணப்பிக்கும் தகுதியை மட்டுமே வழங்கும். பணி நியமனத்தை வழங்காது.ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடிந்த பிறகு, இதுகுறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.கடந்த 2012 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 

எனவே, இதில் ஆசிரியர் தேர்வு, தேர்ச்சி பெற்றவர்களின் நிலை போன்ற பிரச்னைகள் எழவில்லை.இப்போது 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29 ஆயிரம்பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதையடுத்து 46 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களில் இப்போது 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

Wednesday, February 12, 2014

TNTET 2013 தேர்வில் பதிவெண் மறந்தவரா நீங்கள்?

பதிவெண் மறந்தவர்களுக்கு...

 மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவெண்ணை மீட்டு பெறுங்கள்.. உங்கள் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து...

 

Friday, February 7, 2014

TNPSC GROUP 2 தேர்வு அறிவிப்பு..

 http://tnpscexams.net/


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு 2 ஆயிரத்து 269 பணியிடங்களுக்கு குரூப்–2 தேர்வு விண்ணப்பிக்க மார்ச் 5–ந்தேதி கடைசி நாள்

2 ஆயிரத்து 269 பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்–2 தேர்வுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் மாதம் 5–ந்தேதி கடைசி நாள்.

குரூப்–2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுத்துறைகளில் காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் நடத்த உள்ள தேர்வுகள் விவரத்தை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் ஏற்கனவே அறிவித்தார்.

அதன்படி நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் 2 ஆயிரத்து 269 பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு சட்டசபை எழுத்தர் பணி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உதவியாளர், சமூகநலத்துறை உதவியாளர், காவல்துறை உதவியாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

இதற்கான தேர்வு மே மாதம் 18–ந்தேதி நடத்தப்பட இருக்கிறது. ஆன்லைன் வழியாக தேர்வாணைய இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். சிறைச்சாலை, போலீஸ், மருத்துவம், கிராம சுகாதார பணிகள்,போக்குவரத்து கழகம், பதிவுத்துறை, தொழிலாளர் நலம், நெடுஞ்சாலைத்துறை, வரலாற்றுத்துறை உள்ளிட்ட பல துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு படித்திருந்தாலும் போதும். வருவாய் நிர்வாகத்துறை உதவியாளர் பணியிடத்திற்கு பி.இ. படிப்பு தகுதி ஆகாது. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் போன்ற மற்ற பட்டப்படிப்புகள் தகுதியானது. தேர்வு எழுத மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் தேர்வு

எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்ற முழு விவரமும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பிக்க மார்ச் மாதம் 5–ந்தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு மே மாதம் 18–ந்தேதி காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறும். இந்த தேர்வு ஆப்ஜெக்டிவ் முறையாகும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று மட்டும் சரியான விடையாக இருக்கும். அதை டிக் செய்ய வேண்டும்.

Monday, February 3, 2014

83 மதிப்பெண் பெற்றாலே இனி TNTET தேர்வில் தேர்ச்சி... தமிழக அரசு அரிவிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி 55
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற

60 சதவீதம் மதிப்பெண் பெற
வேண்டும் என நிர்ணயிக்கப்பட்
டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்),
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் மாற்றுத்
திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத
மதிப்பெண் சலுகை வழங்கப்படும்
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதாவது தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்),
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் மாற்றுத்
திறனாளிகள் ஆகியோர் ஆசிரியர்
தகுதித் தேர்வில் இனி 55 சதவீதம்
மதிப்பெண்
பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என
அறிவிக்கப்படுவார்கள்.
- தமிழ்நாடு முதலமைச்சர் 03-02-2014

other links