tet books

time


follow me on fb

Sunday, July 14, 2013

பெருந்தலைவர் காமராசர் 111 பிறந்தநாள் இன்று



கல்வி வளர்ச்சி நாளான காமராசர் பிறந்த தினம் இன்று...

இன்று கர்ம வீரர் என்று அழைக்கபடும் காமராஜின் பிறந்த தினம். பலருக்கு காமராஜை பற்றி தெரிந்திருந்தாலும் என்னை பொருத்தவரை எனக்கு தெரிந்த காமராஜை பற்றிய விஷயம் - இவர் ஒரு ஆண் சரஸ்வதி கடவுள். கல்விக்கு சரஸ்வதி கடவுளாக கற்பனையில் சித்தரித்த முன்னோர், இவர் ஒரு வாழும் உதாரணமாக இருந்தவர். "படிச்சவனா இருந்தா உனக்கு தெரிந்திருக்கும்" படிச்சவன் மாதிரியா நடந்துக்குறே" மெத்த படித்தவர்" அப்படின்னு ஒரு மாயையை உருவாக்கிய சில ஆரிய சக்திகளின் பொய்யை உடைத்தெரிந்தவர். இதை நான் விரும்பியோ விரும்பாமலோ சொல்ல காரணம் குல கல்வி முறையை மாற்றி - பொது கல்வி முறையை கொண்டு வந்த படிக்காத மேதை. பிறந்தது 1903 ஆம் ஆண்டு பள்ளிக்கு முதன் முதலாய் சென்றது 1908 ஆம் ஆண்டு கல்வியை முடித்தவர் 1914 ஆம் ஆண்டு ஆம் வெறும் ஆறு ஆண்டுகள் மட்டுமே படித்து பின்பு மானிலத்தை ஆளும் தகுதியை மற்றும் பெறவில்லை உலகளவில் இந்தியாவின் பெஸ்ட் கேம்பஸ் என பெயரெடுத்த "ஐ ஐ டி" மெட்ராஸை துவக்க காரணமாய் இருந்தவர். ராஜாஜி காலத்தில் 12,000 பள்ளிகூடங்களாக இருந்தது 6000 பள்ளிகூடங்கய குறைந்த போது அந்த 6000 பள்ளிகளையும் திறக்க வைத்த ஒரு மகான். அது மட்டுமல்ல 27,000 பள்ளீயாய் உயரவைத்தார்.

உலகத்திலேயே முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை கொன்டு வந்த ஒரு மாபெரும் தலைவரின் இந்த முயற்ச்சிக்கு காரணம் பள்ளி படிப்பு படிக்க முடியாமல் போன காரணமும், பசியின் கொடுமையை உணர்ந்தவர் என்றால் அது மிகையல்ல.180 நாட்கள் மட்டுமே பள்ளீ நாட்களாக இருந்த காலத்தில் 200 - 210 நாட்களாக வேலை நாட்களை உயர்த்தி தேவையில்லாத விடுமுறை நாட்களை குறைத்து அதிக அட்டென்டன்ஸ் மற்றூம் அதி நவீன சிலபஸ்களையும் கொண்டு வந்தவர். நம் நாடு பொருளாதாரம் 1980 களில் இருந்து உயர்ந்த ஒரே காரணம் இவர்தான். ஆம் 7%சதவிகித கல்வியறிவாக இருந்த மானிலத்தை பிரிட்டிஷ் போன பிறகு 37% உயர்த்தி காட்டிய ஒரு உத்தமனின் பிறந்த நாள் இன்று. தென்ன்கத்து மகாத்மா என்று கூறினாலும் அது மிகையாகது. இவரின் பாரத் ரத்னா பெற 100% தகுதியான ஒரு அரசியல் கிங்மேக்கர் ஏழை மக்களுக்கு கர்மவீரராக உயர்ந்தவர். நான் அவரின் இலவச கல்வியோ அல்லது மதிய உணவோ உட்கொள்ளாமல் இருந்திருந்தாலும் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த என் குடும்பத்தின் எதாவது ஒரு உறுப்பினர் இதில் பயனடந்து இருப்பார்கள் என உறுதியாக நினைக்கிறேன்.

அவர் முதலமைச்சர் என்ற மமதையே இல்லாமல் வாழ்ந்த‌ சில நினைவலைகள் - அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில், முன்பகுதியிலேயே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துக்கிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’ என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி...

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. ஒரு அரசாணயை வெளியிட்டிருந்தது அரசு..அந்த உத்தரவை படித்துக்காட்டச்சொன்னார் வீட்டிலுள்ளவர்களை.. அதனைக் கேட்டதும் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்தக்கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். அவரும் ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள். மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை…அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3 பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்.? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. முதல்வர் உங்களைக் கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது. முதரல்வரின் அறையில் உள்ள சோஃபாவில், கன்னத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா என்கிறார். ஆமாங்க ஐயா., நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார். மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்பு பண்ணீட்டன் தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே... ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. சமைக்கலயாமே.... உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.. எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக்கூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’ னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான்’ என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தைங்ககிட்ட சொல்லுங்க’-ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய்க் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார். ஒரு ஏழையின் கண்ணீர் வலி… இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்..!!!அவர் முதலமைச்சராய் இருந்தபோது தலைமைச் செயலகத்தில் லிஃப்ட்டில் பயணம் செய்தார்..லிஃப்டை இயக்கும் பையன் அரசு வேலைக்கு பத்தாவது வரையாவது படித்திருக்க வேண்டுமென்று சட்டம் வந்திருப்பதால் எட்டாவது வரை படித்த தன்னைவேலைக்கு வர வேண்டாமென்று சொன்னதாய் முறையிட்டு வருந்தினான். அவர் அரசாணையைக் காட்டினார். அவனை விட குறைவா படிச்ச நான் முதலமைச்சரா இருக்கலாம், எட்டாவது படிச்ச பையன் லிஃப்ட் பொத்தானை அமுக்கக் கூடாதாண்ணேன்! சட்டத்தை மாத்துங்கண்ணேன்!”

சொன்னவர் பெருந்தலைவர் காமராஜரே தான்

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links