tet books

time


follow me on fb

Thursday, December 25, 2014

Dec 28 - Postal Exam Hallticket Download

Friday, October 31, 2014

அலுவலக நடவடிக்கையில் உறவினர்கள் தலையீடு அமைச்சரை எச்சரித்த கல்வித்துறை செயலாளர்: தலைமை செயலகத்தில் பரபரப்பு தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்கும் பணி தற்போது நடக்கிறது. அரசு அறிவித்துள்ள தகுதிகள் உள்ள பள்ளிகளுக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் கலக்கத்தில் உள்ளன. வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் அங்கீகாரம் புதுப்பிப்பதில் மெட்ரிக் பள்ளிகள் நடத்துவோர் வேகம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உறவினர்கள் சிலர் மெட்ரிக்குலேஷன் இயக்குனர் அலுவலக நடவடிக்கைகளில் தலையிட்டு, அங்கீகாரம் வழங்குவதில் சில யோசனைகளை தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ஒரு சில பள்ளி நிர்வாகிகளை இடைத் தரகர்களாக வைத்து அமைச்சரின் உறவினர்கள் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதனால், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதுபற்றி, பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதாவை தனியார் பள்ளி நிர்வாகிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர். விசாரணையில், அமைச்சரின் உறவினர்கள் என்று கூறிக் கொண்டு சிலர் டிபிஐ வளாகத்தில் அதிகாரிகளின் அறைகளில் இருந்து கொண்டு, அவர்களுக்கே உத்தரவு போடுவதும் தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணியிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் தக்க பதில் கூறாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நேரடியாக விசாரித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அமைச்சர் வீரமணி, செயலாளரின் அறைக்கு சென்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் செய லாளருக்கும் அமைச்சருக் கும் நேரடியாகவே வார் த்தை மோதல் நடந்துள் ளது. பின்னர் அமைச்சர் அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் இயக்குனரக அதிகாரிகளை செயலாளர் சபீதா அழைத்து, இதுபோன்ற தவறுகள் நடக்க அனுமதி அளித்தால், முதல்வரின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்ல வேண்டியது இருக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும், இனிமேல், அமைச்சரின் பெயரைச் சொல்லி யாராவது உத்தரவிட்டால், எந்த உத்தரவிலும் கையெழுத்து போடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இந்த பிரச்னைக்கு பிறகு சில கல்வி அதிகாரிகளை மாற்றுவது என்று பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள் ளது. விரைவில் இதுகுறித்து உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, அமைச்சர் ஆலோசனையில் இருப்பதால் இப்போது பேச முடியாது என்று தெரிவித்தனர்.

Monday, October 13, 2014

Tnpsc Group 4 2014 அறிவிப்பு வெளியானது

Group 4 பணியிட அறிவிப்பை வெளியிட்டது TNPSC

Thursday, September 25, 2014

TNTET வழக்குகள் அனைத்தும் முடிந்தது

வழக்கு தொடுத்த சுமார் 80 பேருக்கு மட்டும்  பணியிடங்களை நிறுத்தை வைத்து மற்றவற்றை நிரப்ப டெல்லி உச்ச நீதி மன்றம் தீர்ப்பு.


5 சதவிகித மதிப்பெண் குறைப்பு மற்றும் அதன் அடிப்படையில் தகுதி பெறுவதை தடை செய்தும் உத்தரவு.

இருப்பினும் இந்த முறை மட்டும் 5 சதவிகித மதிப்பெண் குறைப்பு உட்பட கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.

பணி ஆணைகளை இன்று மாலையே அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இடைநிலை ஆசியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேறியவர்கள் துறை அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தேவை படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.




Thursday, September 11, 2014

TNPSC DEPARTMENT EXAM MAY 2014 RESULTS

TNPSC DEPARTMENT EXAM MAY 2014 RESULTS

TNPSC DEPARTMENT EXAM MAY 2014 RESULTS

TNPSC DEPARTMENT EXAM MAY 2014 RESULTS

TNPSC DEPARTMENT EXAM MAY 2014 RESULTS

TNPSC GROUP 2 - INTERVIEW POST RESULTS

CTET 2014 ADMIT CARD PUBLISHED

Wednesday, September 3, 2014

உங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்ய...

TNTET-PAPER I&II:பணிநியமனத்திற்கு தடை-மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

TET Posting: Stary Order Issued For Paper1 & Paper2 Appointment - பணி நியமனம் நடைபெறக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெட் வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை கிளை நீதிமன்றம் இன்று உத்தரவு.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவதற்கான கலந்தாய்வு திட்டமிட்டபடி, நடத்த அனுமதி உண்டு. ஆனால் உரியபணி இடத்தை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Wednesday, August 6, 2014

PG TRB - REVISED RESULT FOR CV PUBLISHED

TNTET PAPER 1 - Weightage Marks Published

TNTUE BEd Call Letter for first Counselling.

சென்னை பல்கலைக்கழகம் - தொலைநிலைக்கல்வி - தேர்வு முடிவுகள் வெளியீடு.

TMB Clerk - விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 13

SSC ஒருங்கிணைந்த HSC தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 19

Monday, August 4, 2014

TNTET 2013 பாடவாரியாக paper 2 கூடுதல் பணியிடங்கள் விவரம்

பாடவாரியாக paper 2 கூடுதல் பணியிடங்கள் விவரம் சேர்த்து TRB அறிவிப்பு: ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 கூடுதலாக 508 பணியிடங்கள் சேர்த்து TRB அறிவிப்பு TRB ANNOUNCED THE FOLLOWING ADDITIONAL POSTS AS PER IT'S NEW NOTIFICATION SCHOOL EDN DEPT ADDITIONAL POSTS


ENGLISH-43
Maths-82
Physics-55
 Chemistry-55
Botany-24
 Zoology 24
 History-67
Geography- 17
Total-367

 ELEMENTARY EDN DEPT ADDITIONAL POSTS
 Physics-47
Chemistry-47
 Botany-24-

Zoology-23 Total-141

Grand total 367 +141 = 508

Sunday, August 3, 2014

ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு மேல் BT தேர்வர்கள் இறுதி பட்டியல் வெளியீடு!

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.டி.ஆர்.பி.,யின், இந்த தொடர் அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. 'நாம் தேர்வு பெறுவோமா?' என, ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தை பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக., 1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் உறுதியாக தெரிவித்தது. இதனால், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன், தேர்வர்கள் தவம் இருந்தனர்.ஆனால், கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த சொதப்பல் காரணமாக, தேர்வர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். பட்டியல் வெளியாகாதது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:பட்டியலை, தயாரித்து முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். அதன்படி, ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் (நாளை), அரசின் அனுமதி கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

Tuesday, July 15, 2014

இனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை - சுய சான்றொப்பமே போதுமானது.


அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம்(அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.

ஒவ்வொரு தடவை கையொப்பம் வாங்கும்போதும் கையொப்பமிடும் அதிகாரிக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பணம் செலுத்தவேண்டும். இது பொதுமக்களுக்கு சிரமத்தை தருகிறது. அதிலும் ஒரு சில அதிகாரிகள் சான்றிதழ் ஏதேனும் இல்லாவிட்டால் கையெழுத்திட மறுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் சிரமங்களை உணர்ந்து இனி வரும் காலங்களில் விண்ணப்பிப்பவரே தனது விண்ணப்பத்தில் தானே சான்றொப்ப கையெழுத்தை போட்டுகொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இந்த முறையில் கடைசி கட்ட சரிபார்ப்பு பணியின்போது ஒரிஜினல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது. அரசின் இந்த முடிவு பொதுமக்கள் அனைவருக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அரசின் இந்த நல்ல முடிவு குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி மாலை மலர் செய்தி...

Saturday, July 12, 2014

FLASH NEWS : TNTET/TRB : இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் வீரமணி பெருந்துறையில் இன்று(12/07/2014) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்....மேலும் முதல்வரின் அவர்களின் கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சியில் 50 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.... மேலும் கல்வித்துறைக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்.... எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.... இதன் மூலம் ஆசிரியர் தகுதிதேர்வு மற்றும் TRB மூலம் தெர்தேடுக்கபட்டவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணியமர்த்தபடுவார்கள் என தெரிகிறது....

Sunday, June 29, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் இணையத்தில் வெளியீடப்படும் . சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு வாரங்களில் தேர்வு முடிகளும் வெளியிடப்படும் என்று பாலசுபிரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அரசு விதிகளின்படி 2,846 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விடைநகல் தேர்வு முடிவையும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.
TET, ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் ! ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார். மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர்தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Monday, June 16, 2014

15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?-Dinamani பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதனடிப்படையில் 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப்பட்டியல் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை குறித்து இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

Friday, June 6, 2014

TNTET NEW GO - PAPER 2- WEIGHTAGE CALCULATOR

ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த தேர்வில் 74 ஆயிரத் துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரி யர்களும் தேர்ச்சி பெற்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். 7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடையா ளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்ச்சி பெறும் ஆசிரியர்க ளுக்கு சான்றிதழ் அச்சிட்டு அவர் களிடம் ஒப்படைப்பது ஆசிரி யர் தேர்வு வாரியத்துக்கு பெரும் பணியாக உள்ளது.
ஆன்லைனில் தேர்ச்சி சான்றிதழ்
பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) நெட் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ்களை ஆன்லைனில்தான் (இ-சர்டி பிகேட்) வழங்கி வருகிறது. தேர்ச்சி பெற்றவர்கள் பதிவு எண், பிறந்த தேதி, தேர்வெழுதிய மாதம், ஆண்டு ஆகிய விவரங் களை குறிப்பிட்டு யூஜிசி இணைய தளத்தில் இருந்து சான்றிதழ் களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நிலையில், யூஜிசியைப் போன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஆன் லைனில் தேர்ச்சி சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
புதிய திட்டம்
தேர்வு வாரிய குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் பேரும் தேர்ச்சி சான்றிதழை ஆன்லைனிலேயே பெற்று விடலாம்.
7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.

செய்தி உதவி - தி இந்து


TNPSC Group 4 Results Phase 2 Published

Group -4 Results- Phase-ii (Date of Exam: 25.08.2013)
Certificate Verification and Counselling: 16.06.2014 to 18.06.2014
குரூப் -4 இரண்டாம்கட்ட (phase ii ) தேர்வு முடிவுகள்



Result: http://www.tnpsc.gov.in/results/2ndphase_ja_grp42k14_seldoc.pdf




Counselling Schedule & Date-Wise vacancy position



Link :http://www.tnpsc.gov.in/ja2014_counselling.html












Wednesday, May 28, 2014

மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேட் செய்யக் கூடாது...

சென்னை: மதிப்பெண் சான்றிதழை லேமினேட் செய்ய வேண்டாம் என, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன், மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது அறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் லேமினேட் செய்வதாக தகவல் வருகிறது. சான்றிதழை லேமினேட் செய்தால் அது பழுதாகும். மதிப்பெண் சான்றிதழில் பெயர் திருத்தம், பிறந்த தேதியில் திருத்தம் என தெரிய வரும்போது சான்றிதழில் திருத்தம் செய்வது கடினம்.
மாணவர்கள் வெளிநாடு செல்ல முயன்றால், அவர்களின் சான்றிதழ் பின் பக்கத்தில் அரசு முத்திரை இட வேண்டும். இதற்காக லேமினேட்டை பிரிக்கும்போது சான்றிதழ் சேதமாகும்.
எனவே சான்றிதழ்களை லேமினேட் செய்ய வேண்டாம் என மாணவர்களை தேர்வுத் துறை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

Tuesday, April 29, 2014

புதிய வெயிடேஜ் முறை அறிமுகம் - TNTET மூலம் ஆசிரியர் பணி தேர்விற்கு

Paper II க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி? மாதிரி வழிமுறை

12 ஆம் வகுப்பில் 84% எனில் அதற்கு வெயிட்டேஜ் 8.4. 

இளநிலைப் பட்டப்படிப்பில் 58% எனில் 58/100 * 15 = 8.7.
 பி . எட். இல் 71% எனில் 71/100 * 15 = 10.65 
TNTET இல் 90 எனில் 90/150 * 60 = 36. 
எனவே மொத்தமாக.. 63.75


Paper I க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி ? மாதிரி வழி முறை


(+2 % mark * 15)/100+(dted % mark *25)/100+(TNTET mark*60)/150= உங்கள் வெயிடேஜ்.



ஆசிரியர் தகுதித் தேர்வு:
வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும்
பழைய முறை ரத்து
- தின மணி நாளேடு
ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நி
யமனத்துக்காக வழங்கப்படும்
வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
கணக்கிடும் பழைய
முறையை ரத்து செய்து சென்னை உய
ர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்குள்
புதிய அறிவியல் பூர்வ
முறையை உருவாக்கி வெயிட்டேஜ்
மதிப்பெண்கள் கணக்கிட தமிழக
அரசுக்கு நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த
சி.பிரியவதனா உள்பட பலர்
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த
மனு விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் என
இரு பிரிவினருக்கு தனித்தனியா
க மதிப்பெண்கள்
நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதில்,
இடைநிலை ஆசிரியர்களுக்காக,
மேல்நிலைப் படிப்புக்கு 10
சதவீத மதிப்பெண்ணும்,
டிகிரி படிப்புக்கு 15 சதவீத
மதிப்பெண்ணும், ஆசிரியர்
பட்டயப்படிப்புக்கு 15 சதவீத
மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு 60 சதவீத
மதிப்பெண்ணும்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல்,
பட்டதாரி ஆசிரியர்களுக்காக,மே
ல்நிலைப் படிப்புக்கு 15 சதவீத
மதிப்பெண்ணும், டிகிரி மற்றும்
பி.எட். படிப்புக்கு 25 சதவீத
மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு 60 சதவீத
மதிப்பெண்ணும்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 2012-ஆம்
ஆண்டு அரசு ஆணையின்
படி ஆசிரியர் தகுதி தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நி
யமனத்துக்கான வெயிட்டேஜ்
மதிப்பெண்களை ஆசிரியர்
தேர்வு வாரியம் வழங்குகிறது.
அதில், இடைநிலை ஆசிரியர்கள்
90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்
பெற்றால், அதற்கு, 15 வெயிட்டேஜ்
மதிப்பெண்கள், 80 முதல் 90
சதவீத மதிப்பெண்களுக்கு 12
வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 70
முதல் 80 சதவீத
மதிப்பெண்களுக்கு, 9 வெயிட்டேஜ்
மதிப்பெண்ணும், 60 முதல் 70
சதவீத மதிப்பெண்ணுக்கு 6
வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 50
முதல் 60 சதவீத மதிப்பெண்
பெற்றால் 3 வெயிட்டேஜ்
மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
இதே போன்று பட்டதாரி ஆசிரியர்க
ளுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
நிர்ணயிக்கப்படுகின்றன.
இதன் மூலம், 80 முதல் 90
மதிப்பெண்
பெற்றவருக்கு வெயிட்டேஜ்
மதிப்பெண் கணக்கிடுவதிலும், 90
மதிப்பெண்ணுக்கு மேல்
எடுத்தவருக்கு வெயிட்டேஜ்
மதிப்பெண் கணக்கிடுவதிலும்
அதிக வேறுபாடு உள்ளது.
அவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண்
கணக்கிடுவது தவறு.
அதனால், ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்
கணக்கிடப்படும் முறையை மாற்ற
வேண்டும். அதற்காக
பிறப்பிக்கப்பட்ட
அரசாணையை ரத்து செய்ய வேண்டும்
என மனுவில் கோரப்பட்டது.
மேலும், ஆசிரியர் தேர்வின்
தேர்ச்சி வீதத்தில் வழங்கப்படும் 5
சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும்
என சிலரும், 2012-ஆம்
ஆண்டு முதல் தேர்ச்சியில் 5
சதவீதம் தளர்வு வழங்க உத்தரவிட
வேண்டும் என சிலரும் மனுத்
தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள்
மீது நீதிபதி எஸ்.நாகமுத்து முன்ப
ு விசாரணை நடந்தது. மனுதாரர்
பிரியவதனா தரப்பில்
வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன்
ஆஜரானார். அரசுத் தரப்பில்
அரசு தலைமை வழக்குரைஞர்
ஏ.எல்.சோமையாஜி ஆஜரானார்.
விசாரணைக்குப்
பிறகு நீதிபதி பிறப்பித்த
உத்தரவு: ஆசிரியர் தகுதித்
தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண்
தளர்வு வழங்குவது அரசின்
கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம்
தலையிட முடியாது.
மேலும், 5 சதவீத தளர்வை முன்
தேதியிட்டு வழங்குமாறும்
அரசுக்கு உத்தரவிட முடியாது.
அவ்வாறு உத்தரவிட்டால் அதில்
பல்வேறு குளறுபடிகள் ஏற்படும்.
எனவே,
தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்
கல் செய்த மனுக்கள்
தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மேலும், 60 லிருந்து 69
சதவீதம்
பெற்றவருக்கு ஒரு வெயிட்டேஜ்
மதிப்பெண்ணும், 70 மதிப்பெண்
பெற்றவருக்குவேறொருவெயிட்டேஜ்
மதிப்பெண்ணும்
கணக்கிடப்படுவதை ஏற்க
முடியாது. அதில் நிறைய
வேறுபாடுகள் உள்ளன.
ஒவ்வொருவரும் பெற்ற
மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ்
மதிப்பெண் கணக்கிட வேண்டும்.
அதில் அறிவியல் பூர்வ
முறையை பின்பற்ற வேண்டும்.
அது தொடர்பாக நீதிமன்றம்
ஒரு முறையை அரசுக்கு பரிந்துர
ை செய்கிறது.
அதை பின்பற்றினாலும்
சரி அல்லது அரசு தரப்பில்
வேறு ஒரு அறிவியல் பூர்வ
அணுகுமுறையை கொண்டுவந்தாலும்
சரி. அது தொடர்பாக புதிய
அரசாணை வெளியிட வேண்டும்.
அரசு இந்த முறையை அடுத்த
கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும்
என இந்த நீதிமன்றம் நம்புகிறது.
எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண்
கணக்கிடப்படும் பழைய
முறை ரத்து செய்யப்படுகிறது என
உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, April 22, 2014

TNTET 2013 - PAPER II CERTIFICATE VERIFICATION

FROM MAY 6 TO MAY 12

http://trb.tn.nic.in/TET2013/21042014/msg1.htm

As per the Notification No.3/2013 published on 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2013 on 17.08.2013 and 18.08.2013 and provisional result and final answer key were published on 11.01.2014 in the TRB website.
Now the Board has released the revised additional provisional C.V list for TNTET Paper I and II as per G.O.Ms.No.25, School Education (TRB) Department, dated 06.02.2014 by giving 5% relaxation in the qualifying marks. Candidates who have secured 55% marks and above (82 marks to 89 marks) in Paper I and Paper II are also being called for Certificate Verification. 
TNTET Paper- II Candidates are advised to download the certificate verification letters etc., and attend the certificate verification as per the schedule given therein. Call letters will not be sent through post. It is also decided to give one more chance to the candidates who were absent for the Certificate Verification conducted during 20.01.2014 to 26.01.2014 and also to those candidates who have not submitted the required certificates. They are permitted to attend on the last day of the Certificate Verification with all records. 
Calling for Certificate Verification is not a guarantee for selection. The provisional list and the outcome of this Certificate Verification exercise is subject to final orders in various writ petitions challenging Answer Keys etc., filed before the Hon’ble High Court of Madras. 

Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

SBI PO - Apply Online Last date 25-04-2014

Saturday, February 15, 2014

சூன் மாதம்தான் TNTET தேர்வான புதிய ஆசிரியர் பணி நியமனம்...


TET - ஆசிரியர் பணி நியமனம்தாமதமாகும், புதிய நியமனம்
ஜூன் மாதம் நடைபெறும்
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்
குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால்
தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும்
தாமதமாகும். பிளஸ்2 பொதுத்
தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ்
சரிப்பார்ப்பு நடக்கும். அதன் பின்னர்
வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன்
மாதம் பணி நியமனம்
செய்யப்படுவார்கள்.இதனால்
அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த
ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர்.
இந்த முறை நடைபெற்ற தேர்விலும் பல
குளறுபடிகள் ஏற்பட்டது. குறிப்பாக
வினாத்தாளில் பல தவறுகள் இருந்தன.
இதனால் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
எனவே தேர்வு முடிவுகள் வெளியிடுவதில்
தாமதம் ஏற்பட்டது. இந்த
பிரச்சனைகளை கடந்து ரிசல்ட் வெளியானது.
வழக்கமாக ரிசல்ட் வெளியான சில
மாதங்களில் பணி நியமனம்
வழங்கப்படும். ஆனால் இந்த முறை ரிசல்ட்
வெளியான பின்னர் பலர்
வழக்கு தொடர்ந்தனர். இதனால் சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் பாதித்தது.
இதற்கிடையில் தகுதித்
தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை
இடஒதுக்கீட்டு அடிப்படையில் குறைக்க
வேண்டும் என்று பல அமைப்புகள்
அரசை வலியுறுத்தியது.இது தொடர்பாக
தேர்வு வாரியம்,
பள்ளிக்கல்வித்துறை செயலாளர்
சபீதாவுக்கு பரிந்துரைத்தது. ஆனால்,
அதை அவர் ஏற்கவில்லை. தகுதியை மட்டும்
பார்க்க வேண்டும். இதில்
இடஒதுக்கீடு முறை கூடாது. மதிப்பெண்
குறைப்பு இல்லை என்பதில் கண்டிப்புடன்
இருந்தார். இதனால் 90 மதிப்பெண் பெற்ற 25
ஆயிரம் பேருக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
அவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட
இருந்தது.
இந்த நிலையில் கடைசி கட்டத்தில்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த
பிரச்சனையில் தலையிட்டது.
இடஒதுக்கீட்டு அடிப்படையில் மதிப்பெண்
குறைக்கப்பட வேண்டும். இல்லையென்றால்
வன்கொடுமை சட்டம் பாயும்
என்று எச்சரித்தது.
இது அரசுக்கு நெருக்கடியை தந்தது.
இதனால் 5சதவீத மதிப்பெண்
குறைப்பை முதல்வர் அறிவித்தார். இதனால்
இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.
அதாவது 90 மதிப்பெண் பெற்று 25ஆயிரம்
பேரும், இப்போது 82 மதிப்பெண்ணாக
குறைத்துள்ளதால் கூடுதலாக 45 ஆயிரம்
பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதிதாக
தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க
வேண்டும்.
இப்பணியில்
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள்
ஈடுபடுவார்கள்.
இப்போது அவர்களை பயன்படுத்த முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது: மார்ச் 3ம் தேதி பொதுத்
தேர்வு தொடங்குகிறது. இந்த
பணிக்கு முன்பாக பல ஆய்வு கூட்டம்
நடக்கும். இதற்கு துறையின்
இணை இயக்குனர்கள் இருக்க வேண்டும்.
எனவே தேர்வு முடியும் வரையில் சான்றிதழ்
சரிபார்க்க முடியாது. பிளஸ்2
தேர்வு முடிந்ததும் மார்ச் மாத இறுதியில்
சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும்.
எப்படியும் 10 நாட்களுக்கு மேல்
இப்பணி நடக்கும். ஏப்ரல் மாதம் வெயிட்டேஜ்
மதிப்பெண் பார்க்கப்படும். அதன் பின்னர்
லோக்சபா பொதுத் தேர்தல் இருப்பதால்,
அடுத்த கல்வியாண்டில், அதாவது ஜுன்
மாதம் தான் பணி நியமனம்
செய்யப்படுவார்கள். இவாறு அவர் கூறினார்.

Thursday, February 13, 2014

TET 2013 தேர்வு அனைவருக்கும் பணி வழங்கும் தேர்வு அல்ல.. தகுதித் தேர்வு மட்டுமே!

டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?

அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 15 ஆயிரம் பட்டதாரி,
இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களே உள்ளதால் மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும் தகுதியை மட்டுமே பெற்றுள்ளனர். இப்போது பணி நியமனம் செய்யப்படுபவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனங்களில் முன்னுரிமை கிடைக்கும். மேலும் அடுத்த ஆண்டுக்கான பணி நியமனத்திலும் இவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் எனஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இப்போது தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் பேருக்கு முதலில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்குதனியாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு நியமிக்கப்படும் 15 ஆயிரம் ஆசிரியர்களைத் தவிர மீதமுள்ளவர்களின் நிலை என்ன என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர்.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராவதற்கான அடிப்படைத் தகுதி மட்டுமே. அந்த வகையில் இந்த 75 ஆயிரம்பேரும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.முதலில் இவர்களுக்கு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். பிறகு, பட்டதாரிஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்.அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணி நியமனம் கோரி ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆண்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இடைநிலை ஆசிரியர்கள்: 

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டயப் படிப்பு அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.தகுதியான விண்ணப்பதாரர்களில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள் தேர்வு செய்யப்படாதவர்களாகக் கருதப்படுவர்.இவர்கள் அனைவரும் அடுத்து நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தங்களது மதிப்பெண்ணை அதிகரிப்பதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம்.அதேநேரத்தில், ஒரு தேர்வில் பெற்ற தேர்ச்சி ஏழரை ஆண்டுகளுக்குச் செல்லும் என்பதால், அடுத்து வரும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெறுவதற்கான தகுதியையும் இவர்கள் பெறுவார்கள்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் என்பது அப்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் அடிப்படையில் இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பணி நியமனத்துக்காக விண்ணப்பிக்கும் தகுதியை மட்டுமே வழங்கும். பணி நியமனத்தை வழங்காது.ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடிந்த பிறகு, இதுகுறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.கடந்த 2012 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 

எனவே, இதில் ஆசிரியர் தேர்வு, தேர்ச்சி பெற்றவர்களின் நிலை போன்ற பிரச்னைகள் எழவில்லை.இப்போது 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29 ஆயிரம்பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதையடுத்து 46 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களில் இப்போது 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

Wednesday, February 12, 2014

TNTET 2013 தேர்வில் பதிவெண் மறந்தவரா நீங்கள்?

பதிவெண் மறந்தவர்களுக்கு...

 மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவெண்ணை மீட்டு பெறுங்கள்.. உங்கள் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து...

 

Friday, February 7, 2014

TNPSC GROUP 2 தேர்வு அறிவிப்பு..

 http://tnpscexams.net/


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு 2 ஆயிரத்து 269 பணியிடங்களுக்கு குரூப்–2 தேர்வு விண்ணப்பிக்க மார்ச் 5–ந்தேதி கடைசி நாள்

2 ஆயிரத்து 269 பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்–2 தேர்வுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் மாதம் 5–ந்தேதி கடைசி நாள்.

குரூப்–2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுத்துறைகளில் காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் நடத்த உள்ள தேர்வுகள் விவரத்தை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் ஏற்கனவே அறிவித்தார்.

அதன்படி நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் 2 ஆயிரத்து 269 பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு சட்டசபை எழுத்தர் பணி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உதவியாளர், சமூகநலத்துறை உதவியாளர், காவல்துறை உதவியாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

இதற்கான தேர்வு மே மாதம் 18–ந்தேதி நடத்தப்பட இருக்கிறது. ஆன்லைன் வழியாக தேர்வாணைய இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். சிறைச்சாலை, போலீஸ், மருத்துவம், கிராம சுகாதார பணிகள்,போக்குவரத்து கழகம், பதிவுத்துறை, தொழிலாளர் நலம், நெடுஞ்சாலைத்துறை, வரலாற்றுத்துறை உள்ளிட்ட பல துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு படித்திருந்தாலும் போதும். வருவாய் நிர்வாகத்துறை உதவியாளர் பணியிடத்திற்கு பி.இ. படிப்பு தகுதி ஆகாது. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் போன்ற மற்ற பட்டப்படிப்புகள் தகுதியானது. தேர்வு எழுத மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் தேர்வு

எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்ற முழு விவரமும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பிக்க மார்ச் மாதம் 5–ந்தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு மே மாதம் 18–ந்தேதி காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறும். இந்த தேர்வு ஆப்ஜெக்டிவ் முறையாகும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று மட்டும் சரியான விடையாக இருக்கும். அதை டிக் செய்ய வேண்டும்.

Monday, February 3, 2014

83 மதிப்பெண் பெற்றாலே இனி TNTET தேர்வில் தேர்ச்சி... தமிழக அரசு அரிவிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி 55
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற

60 சதவீதம் மதிப்பெண் பெற
வேண்டும் என நிர்ணயிக்கப்பட்
டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்),
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் மாற்றுத்
திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத
மதிப்பெண் சலுகை வழங்கப்படும்
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதாவது தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்),
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் மாற்றுத்
திறனாளிகள் ஆகியோர் ஆசிரியர்
தகுதித் தேர்வில் இனி 55 சதவீதம்
மதிப்பெண்
பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என
அறிவிக்கப்படுவார்கள்.
- தமிழ்நாடு முதலமைச்சர் 03-02-2014

other links